Begin typing your search above and press return to search.
திருப்பதி- இந்திய தலைமை நீதிபதி ரமணா இன்று ஏழுமலையானை வழிபட்டார்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி மலையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தலைமை நீதிபதி இன்று காலை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்து இந்திய தலைமை நீதிபதி ரமணா இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். சாமி வழிபாட்டிற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி மலையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு ஏழுமலையானை வழிபட்ட அவர் இன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாரங்கள் நிறைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.