கயத்தார் அருகே விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம்

கயத்தார் அருகே விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம்
X
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விபத்தில் மரணம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 51) சிறப்பு உதவி ஆய்வாளர். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் போலீஸ் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் விடுமுறையில் இவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது சாலைப்புதூர் கிராமத்திலிருந்து கயத்தாருக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது நாய் குறுக்கே விழுந்ததில் நிலைதடுமாறிய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் தலையில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவியும், செல்வ ராதிகா, சண்முகப்பிரியா என இரண்டு மகள்களும், பொன்சுதாகர் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதுகுறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story