/* */

True love Kavithai Tamil மாசில்லா உண்மைக்காதல் என்றுமே மாறாது

True Love Kavithai Tamil -காதல் கவிதை வரிகள் மனதிற்கு ஒரு இதமான வருடலை கொடுக்க கூடியவை. காதலை விரும்பாத உயிர்கள் இந்த உலகில் இல்லை

HIGHLIGHTS

True love Kavithai Tamil மாசில்லா உண்மைக்காதல் என்றுமே மாறாது
X

உண்மைக்காதல் 

True Love Kavithai Tamil -அழகே உன்னை நான் பூக்களுடன் மதிப்பிட மாட்டேன் ஏனெனில் பூக்களின் அழகு கூட வாடும் வரை தானே உன் மீது நான் வைத்திருக்கும் நேசம் இந்த ஆயுள் காலம் முழுவதும் அழகாய் நிலைத்து நிற்கும்.



உனக்காக நான் தீட்டும்

இந்த காதல் கவிதைகள் அனைத்திற்கும்

உயிர் இருந்தால் யாவும் கூறும்

ஒரே வார்த்தை உன் பெயர் தானே


நாட்கள், வாரங்கள்,

மாதங்கள், வருடங்கள்

என அனைத்துமே கடந்து போனாலும்

மாற்றங்கள் பல என் வாழ்க்கையை

மாற்றி பார்த்தாலும்

என்றும் மாறாது என் அடிமனதில்

உன் நினைவுகளும்

ஆழ்மனதில் உனக்கான காதலும்

மறவாமல் நிலைத்து நிற்கிறதே


உன் செல்ல குறும்பிலும்

இனிய சிணுங்கல்களிலும்

நிலை மாறாத அன்பிலும்

என் மீது வைத்திருக்கும் அக்கறையிலும்

சிலாகித்து கிடக்கிறேன்

எக்கணமும் நம் காதலுடன்.


நடைபாதைகளில் நடக்க தெரியும் தான்

ஆனாலும் உன் கை விரல் பிடித்து

நடக்கும் போது

நடைபழகும் குழந்தை போல தான்.


உன்னை காணும் அந்த

சில நொடிகளுக்காக

பல மணி நேரம் காத்திருக்கும்

அந்த நேரத்திற்கு தெரியும்

நான் உன் மீது கொண்ட

காதலின் உயரம்.


நீ அழகாக இருந்தால் தான்

உன்னை விரும்புவேன்

என்பதல்ல காதல்

நீ எப்படி இருந்தாலும்

உன்னை மட்டும் தான் விரும்புவேன்

என்பதே உண்மை காதல்.


உன் முகத்தை பார்த்தால்

போதும் வலிகளை கூட

சுகமாக உணர்ந்திடுவேன்.

உன் முகம் காண

காத்திருப்பதும்

ஒரு சுகம் தான்.


நீ காதலில் ஒரு நாணயம்

இரண்டு பக்கமும் விழுகிறாய்

நீ எந்த பக்கம் விழுவாய் என்ற

ஏக்கத்துடன் வாழ்கிறேன்

அதிலும் சுகமுண்டு


படையில் எல்லாம் இழந்து நிற்கும் வீரனைப்போல்...

உன்னிடம் எல்லாவற்றையும் வழங்கி

இப்போது ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன்

என்றும் இழக்கமாட்டேன், நீ தந்த நினைவுகளை

நான் கொண்ட உண்மை காதல்

நீ தந்த நினைவு பரிசு


நீ

நிலாவாக இரு ....!!!

நிழலாக இரு ....!!!

எதுவாக இருந்தாலும் ..

காதல் செய்கிறேன் ....!!!

நிலவாக இருந்தால்

நினைவுகளால் காதலிப்பேன் ...!!!

நிழலாக இருந்தால்

கனவுகளால் காதலிப்பேன்


நீ தரும் நினைவுகள்

சிலவேளை காயமாய் இருக்கிறது

சிலவேளை மருந்தாக இருக்கிறது

அதனால் தான்

இத்தனை வலியை நீ தந்தாலும்

சிரித்துவிட்டு இருக்கிறேன்


இதயம் ஒரு கையளவு

என்று சொன்னார்கள்

உன் இதயத்தில் இணைந்தேன்

இன்று வரை அதன்

எல்லையை தேடுகிறேன்

இப்படிதான் வாழ்க்கையை

தொலைத்தவர்கள் அதிகம்

நான் மட்டும் விதிவிலக்கில்லை



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 11:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  3. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  5. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  7. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  8. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  10. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...