பொறுத்தார் பூமி ஆள்வார், சும்மாவா சொன்னாங்க?

Porumai Quotes in Tamil
நமக்கு ஏன் பொறுமை தேவை?
Porumai Quotes in Tamil-மற்றவர்கள் குறைகள் நமக்கு பளிச்செனத் தெரியலாம். பொறுமையாக இல்லையென்றால் யோசிக்காமல் பேசிவிடுவீர்கள். எதிர்பார்க்காமல் நடக்கிற ஏதோவொன்று உங்கள் பொறுமையைச் சோதிக்கும்போது. பொறுமையாக இருப்பது எப்படி?
அவசரப்பட்டுப் பேசிவிடாதீர்கள். உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் பேசினார் என்று நினைக்காதீர்கள்.
நம்மில் நிறைய பேர், அடுத்தவர் என்ன சொன்னார் அல்லது என்ன சொல்ல வந்தார் என்று யோசிக்காமல் நாமாகவே ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு கோபப்பட ஆரம்பித்துவிடுவோம்.
உங்களைப் புண்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தால்கூட, பதிலடி கொடுக்காமல் நீங்கள் பொறுமையாக இருந்தால் உங்களுக்குள் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
பொறுமை என்றால் நமக்கு வேண்டிய ஒன்றுக்காகக் காத்திருப்பது, என்ன நேர்ந்தாலும் அமைதி காப்பது, மௌனமாகச் சிரமங்களைச் சகித்துக்கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நாம் அறிந்து வைத்திருக்கும் பொருள்.
நாம் அனைவரும் பழைய பழமொழியை அறிவோம்: பொறுமை ஒரு நல்லொழுக்கம். ஆனால் அது உண்மை! பொறுமை நமது இலக்குகளை அடையவும், வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும், நம்மை குறைவான எதிர்வினையாற்றவும் உதவும், இது மோசமான முடிவுகளுக்கு நம்மைக் குறைக்கும். வெறுமனே காத்திருப்பது பொறுமை அல்ல; காத்திருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதும் தான்
இனி பொறுமை பற்றிய பொன்மொழிகளை பார்ப்போம்
பொறுமை ஆன்மிக குணங்களில் மிகச்சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால், வேறு எதுவும் தேவையில்லை. பொறுமை மட்டுமே போதும், அது மட்டுமே போதும். பொறுமை என்றால் இணைப்புணர்வு, எந்த வித அவசரமும் இல்லாமல் செய்யப்படுவது
நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை அவசியம்
பொறுமை மிக கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது,
காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம். அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை
பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள்வாங்குபவனாக மாறுகிறான்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள். (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள் - குர்ஆன்
நீங்கள் தண்டிப்பதாயின் நீங்கள் துன்புறுத் தப்பட்ட அளவுக்கே தண்டியுங்கள். நீங்கள் பொறுமையுடனிருந்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே மிகச் சிறந்ததாகும் - - குர்ஆன்
மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருந்தால்தான் தவறை விட்டும் ஒதுங்கி வாழ முடியும்.
தனது தேர்வு இல்லாமலேயே ஏற்படும் இழப்புக்களை மனிதன் இலகுவில் சகித்துக் கொள்கின்றான். எல்லாம் விதிப்படி நடந்தது என்று நம்பிவிட்டும் போகின்றான். இவற்றை விரும்பியோ விரும்பாமலோ அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதது - விவேகானந்தர்
பொறுமையே பொறாமையை வெல்லும் - திரு. வி. க
பொறுமையுள்ளவர்கள் மலைகளை மிதித்தே கடந்து விடுவார்கள் - மகாத்மா காந்தி
பொறுமை என்பது மகிழ்ச்சியின் தாயாகும் - டால்ஸ்டாய்
வாழ்க்கையில் மிக பெரிய உயரம் அடைய பொறுமை மிக முக்கியம்.
பணம் கூட ஒரு சில இடங்களில் மட்டுமே தேவைப்படும்.
ஆனால் பொறுமை எல்லா இடத்திலும் தேவைப்படும்
கோபப்பட்டு வென்று விட்டாய் என்றால் உன் கோபம் பெரிது என்று அர்த்தம் இல்லை.
அதை தாங்கி கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்.
காத்திருக்கும் பொறுமை நமக்கிருந்தாலும் காலத்துக்கு இல்லை.
இந்த உலக வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிக முக்கியமான குணம் பொறுமை.
பொறுமை கசக்கும்; ஆனால், அதன்மூலம் கிடைக்கும் பலன் இனிக்கும் - அரிஸ்டாட்டில்
வாழ்க்கை பயணத்தில் இரண்டு கடினமான சோதனைகள்.
சரியான தருணத்திற்காக காத்திருக்கும் பொறுமை மற்றும் நாம் சந்திப்பதில் ஏமாற்றமடையாத தைரியம்
மெதுவாக வளரும் மரங்கள் சிறந்த பலனைத் தரும்
பொறுமையுடன் இருக்கக்கூடியவர் தான் விரும்புவதைப் பெற முடியும். - பெஞ்சமின் பிராங்க்ளின்
பொறுமை என்பது காத்திருக்கும் திறன் அல்ல. பொறுமை என்பது என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும், அதை நேர்மறையான வளர்ச்சி வாய்ப்புகளாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் நீங்கள் காத்திருக்கும் போது இறுதியில் அனைத்தும் செயல்படும் என்று நம்புவதற்கு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
பொறுமையைக் கற்றுக்கொள்வது ஒரு கடினமான அனுபவமாக இருக்கலாம், ஆனால் ஒருமுறை வெற்றி பெற்றால், வாழ்க்கையை எளிதாகக் காண்பீர்கள்.
பொறுமையே சக்தி. பொறுமை என்பது செயல் இல்லாதது அல்ல; மாறாக இது "நேரம்" , சரியான கொள்கைகள் மற்றும் சரியான வழியில் செயல்பட சரியான நேரத்திற்கு காத்திருப்பது
காத்திருப்பவர் பொறுமையானவர். பொறுமை என்ற வார்த்தையின் அர்த்தம், நாம் இருக்கும் இடத்திலேயே தங்கி, அங்கு மறைந்திருக்கும் ஏதோ ஒன்று நமக்குத் தோன்றும் என்ற நம்பிக்கையில் சூழ்நிலையை முழுமையாக வாழ விரும்புவதாகும்
நான் பொது மக்களுக்கு ஏதேனும் சேவை செய்திருக்கிறேன் என்றால் அதற்கு என் பொறுமையான சிந்தனையே காரணம் - ஐசக் நியூட்டன்
ஒரு கணம் பொறுமை பெரும் பேரழிவைத் தடுக்கலாம். ஒரு நிமிட பொறுமையின்மை ஒரு முழு வாழ்க்கையையும் அழிக்கக்கூடும்- சீன பழமொழி
பொறுமை என்று வரும்போது, பழைய பழக்கங்களை நாம் மாற்ற வேண்டியதில்லை; நாம் சிறந்தவற்றை உருவாக்க முடியும்.
'பதறாத காரியம் சிதறாது' என்பது போல நிதானத்தை உருவாக்கிக்கொள்ளும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையின் சிக்கல்களைக் களையவும் பல வழிகள் பிறக்கின்றன.
'A man who is a master of Patience is the master of everything else' என்கிறார் முன்னாள் அமெரிக்க அரசியல் தலைவர் ஜார்ஜ் சேவில். பொறுமையைக் கைவசமாக்குவோம்! வாழ்க்கையில் சாதிப்போம்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu