/* */

வலி நிறைந்த வாழ்க்கைக்கான வாசகங்களை கொஞ்சம் படியுங்களேன்...

Pain Life Quotes in Tamil-வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோஷமாகவே இருக்காது.அதேபோல் எந்நேரமும் கஷ்டத்தோடு இருக்காது. இரண்டும் மாறி மாறி வரக்கூடியதுதான் வாழ்க்கை.

HIGHLIGHTS

Pain Life Quotes in Tamil
X

Pain Life Quotes in Tamil

Pain Life Quotes in Tamil

''வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் '' என்ற சினிமா பாட்டினைக் கேட்டிருப்பீர்கள்...இது ஒரே ஒரு வரிதான் இந்த வரியில்தாங்க வாழ்க்கையே அடங்கியிருக்குது....

அதாவது வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் அனைத்துமே வெற்றியை தராது. சக்ஸஸ் ஆகிவிடாது. ஏமாற்றங்களும் வரத்தான் செய்யும். ஆனால் அந்த எதிர்பார்ப்பு தோல்வியடைந்தாலும் நீ மற்றொரு வேலையை செய்ய பழகிக்கொள்ளவேண்டும் . அதாவது வாழ்க்கையில் நீ வாழ வேண்டும் என நினைத்தால் ஆயிரம் வழிகள் உள்ளது. குற்றச்செயல்களை எதுவும் செய்ய வேண்டாம். உழைத்து பிழைக்க எத்தனை வழிகள் இவ்வுலகில் உள்ளது தெரியுமா.

பெரும்பாலான இளைஞர்கள் நாம் டிகிரி படித்துவிட்டோம். இன்ஜினியரிங் படித்துவிட்டோம் என ஒயிட் காலர் வேலைகளுக்காக காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையினை வீணடித்துக்கொள்கின்றனர். காலமும் நேரமும் போனால்வராதுங்க.. சாதாரணமாக சிறிய அளவில் சொந்த தொழில் ஆரம்பித்தால்கூட யாருக்கும் கை கட்டி பதில் சொல்ல தேவையில்லை. எடுத்தவுடன் யாருமே பெரியதாக துவங்கிவிடவில்லை. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டினை துவங்கி வளர வளர வளர்ந்துதான் பெரிய முதலாளிகளாக உருவெடுத்துள்ளனர். எப்படி ஒரு சிற்பியின் சித்தரவதையினை தாங்கிகொண்ட கல் அழகான உருவமாக மாறுகிறது. இதைப்போல்தான் வாழ்க்கையும் வலிகள் மிகுந்தவைதான் . அந்த வலிகளை தாங்கி கொண்டால் எப்போதும் நம் வாழ்வு சுகமே. சரி இதற்கான வாசகங்கள் அழகு தமிழில் படிச்சு பாருங்களேன்...

வலிகள் ஒருவனை சிந்திக்க வைக்கிறது. சிந்தனை ஒருவனை புத்திசாலியாக்குகிறது

தன்னை காயப்படுத்தியவரை விட்டு மௌனமாக விலகிச் செல்பவர்கள் உண்மையான பக்குவ நிலையை அடைந்தவர்கள்.

பிடித்தவர்களின் உதார்சீனத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. கண்ணீரால் மட்டுமே விவரிக்க முடியும்.

இந்த உலகம் நாம் சொல்லும் உண்மையை விட மற்றவர்கள் சொல்லும் பொய்யைத் தான் அதிகம் நம்பும்.

முள்ளின் வலி ஒரு நிமிடம்.. சொல்லின் வலி பல வருடம்..

எத்தனையோ துன்பங்களை கடந்துவிட்டேன்.. இருந்தும் மனதில் ஏதோ ஒரு பயம்.. இந்த வாழ்க்கை இன்னும் என்னவெல்லாம் கற்றுத் தரப் போகின்றதோ என்று..

எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அடிகளை விட அது தரும் வலிகள் அதிகம். பின் எத்தனை மன்னிப்பு கேட்டாலும் அது மாறாது, மறையாது.

நம்மால் ஒருவருக்கு பிரச்சினை வருவதென்றால், அந்த இடத்தை விட்டு விலகி விட வேண்டும். அது உறவானாலும் சரி, உயிர் நட்பென்றாலும் சரி..

நேற்று வரை முக்கியமாக இருந்த நாம், நாளைக்கே யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த அந்நொடி அமைதியாய் விலகி விடுவது நல்லது.!!

உங்களை விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது உங்களைப் பற்றிய வதந்திகள் மட்டுமே.. உங்கள் வலிகள் அல்ல..

உணர முடியாத சந்தோஷத்தைக் கொடுப்பதும் உணர முடியாத வலிக்களைக் கொடுப்பதும், மனதிற்குப் பிடித்தவர்களால் மட்டுமே முடியும்.

காயத்தை ஆற்றுவது, காயப்பட்டதை விட மிகவும் வேதனையானது.

தொலைந்த பின்பு ஆரம்பிக்கும் தேடல்கள் தொலையும் முன்பு ஆரம்பித்திருந்தால் தொலைந்திருக்க வாய்ப்பில்லை . . . நேசிப்பவர்களை

மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது இருக்கும் தைரியம் தனக்குத் தேவைப்படும்போது இருப்பதில்லை..

நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்.. நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்.. சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்.. மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்..

மறக்காத வழியும் இல்லை.. சிரிக்காத தருணம் இல்லை.. கடக்காத பிரச்சினை இல்லை.. வலியில்லா அன்பும் இல்லை.. இதுவும் கடந்து போகும் எல்லாம் பழகிப் போகும்..

வாழ்க்கையின் மிகப் பெரிய பாடங்கள் வலியின் மூலம் கற்றுக்கொள்ளப்படுவதால், சில நேரங்களில் காயப்பட வேண்டியுள்ளது.

சில நேரங்களில் கண்ணீரால் வெளிப்படுத்த முடியாத வலியை கூட, புன்னகை மறைக்கிறது.

வலியில்லாமல் நடப்பது ஒரு வரம். வலியைக் காட்டாமல் நடப்பது ஒரு திறமை.

வலிகள் தொடங்கும் போது தான், வாழ்க்கை ஏதாவது கற்பிக்க முயல்கிறது.

pain life quotes in tamilஅன்பு புரிந்து உணர வைக்கும். வலிகள் உணர்ந்ததை புரிய வைக்கும்.

புதிய தொடக்கங்கள் பெரும்பாலும் வலிமிகுந்த முடிவுகளாக மறைக்கப்படுகின்றன.

வாழ்நாள் முழுவதும் வலியை அனுபவிப்பதை விட ஒரு முறை இறந்து விடுவது நல்லது.

உலகம் ஒரு வித்தியாசமான கல்லூரி.. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு தேர்வு வைப்பது இல்லை.. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..

முடிந்த வரை மறந்து விடுகிறேன்.. முடியவில்லை என்றால் இறந்து விடுகிறேன்..

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை..

அழுவதால் எந்த பயனும் இல்லை.. ஆனாலும் சில வலிகளை அழுது தான் மறக்க வேண்டியுள்ளது...

உண்மை சிறிது நேரம் காயப்படுத்தலாம் ஆனால் பொய் என்றென்றும் வலியை ஏற்படுத்துகிறது.

ஏமாற்றம் எனக்குப் புதிதல்ல... நான் ஏமாறும் விதம் தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது.. சில நேரம் அன்பால்.. சில நேரம் நம்பிக்கையால்..

pain life quotes in tamilவிலகி விட்டேன்.. வெறுத்துப் போய் அல்ல, நீ வெறுக்கிறாய் என்று தெரிந்து போய்..

இருண்ட இரவுகள் தான் பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்குகின்றன.

சில நேரங்களில் தவறான தேர்வுகள் நம்மை சரியான இடத்திற்கு கொண்டு வரும்.

வலிகளை விட கொடியது சொல்லமுடியாத உணர்வுகளை மனதில் போட்டு புதைப்பது..

உன்னை உண்மையாக நம்புபவரிடம் பொய் சொல்லாதே. அது மரணத்தை விட மோசமான வலி. நீ செய்யும்போது தெரியாது. மற்றவர்கள் உனக்குக் கொடுக்கும்போது தான் புரியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 5:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!