Morning Walk Tips - மார்னிங் வாக்கிங் சென்று வந்த பின் என்ன சாப்பிடலாம்? உடல் எடை குறைய டிப்ஸ்!

Morning Walk Tips- காலையில் வாக்கிங் சென்று வந்த பின் என்ன சாப்பிட வேண்டும் (கோப்பு படம்)
Morning Walk Tips-பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சிறு வயதிலேயே கடுமையான நோய்களுக்கு மக்கள் பலியாகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் எழுந்திருக்க ஒரு குறிப்பிட்ட நேரமோ அல்லது தூங்குவதற்கு நேரமோ இல்லை. அனைவரும் தங்களின் பிஸியான வாழ்க்கைக்கு பின்னால் ஓடிக்கொன்றிருக்கின்றனர்.
நோய்களில் இருந்து தப்பித்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமானால், காலையில் சரியான நேரத்தில் எழுந்து குறைந்தது 30 நிமிடங்களாவது வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், சிலர் காலை நடைப்பயணத்திற்குப் பிறகு சில தவறுகளைச் செய்கிறார்கள். இதனால், அவர்கள் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்கத் தொடங்குகிறார்கள். காலை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
காலை நடைப்பயிற்சிக்கு பின் என்ன செய்ய வேண்டும்?
காலை நடைப்பயணத்திற்குப் பிறகு உடல் சூடாகிவிடும். இந்நிலையில், முதலில் நீங்கள் வீட்டிற்கு வந்து உடலை குளிர்விக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஏர் கண்டிஷனர் அல்லது குளிரூட்டியின் முன் நேரடியாக உட்கார வேண்டியதில்லை. இது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம். குறைந்த வேகத்தில் மின்விசிறியை இயக்கி, சிறிது நேரம் வசதியாக உட்காருங்கள், இது உங்கள் இதயத் துடிப்பை சீராக்கும்.
காலை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி முடிந்து திரும்பியதும், முதலில் நீங்கள் எவ்வளவு கலோரிகளை எரித்துள்ளீர்கள் என்பதைச் சரிபார்க்கவும். அதாவது, நீங்கள் மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்தீர்களா அல்லது நடைபயிற்சி மற்றும் லேசான யோகா செய்தீர்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
உங்கள் உடலில் கிரியேட்டினின் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும். நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்திருந்தால் முதலில் சுமார் 2 கிளாஸ் தண்ணீர் எடுக்க வேண்டும். அதேசமயம் லேசான உடற்பயிற்சி செய்திருந்தால் 1 கிளாஸ் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சாதாரண நீருக்கு பதிலாக, நீங்கள் இளநீர் குடிக்கலாம். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் உங்கள் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேங்காய் தண்ணீர் உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.
நடைப்பயிற்சி முடிந்து திரும்பி வந்த பிறகு, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் உடற்பயிற்சியின் பின்னர் குளிர்ந்த நீரை குடித்தால், அது தசைகளில் விறைப்பை ஏற்படுத்தும்.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உங்கள் தசைகள் தளர்வடைந்து உங்களை நன்றாக உணரவைக்கும்.
தண்ணீர் குடித்து 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து பழங்களை சாப்பிட வேண்டும். ஏனெனில், காலை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியின் பின்னர் கலோரிகள் எரிக்கப்படும் போது, உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எனவே, பழங்கள் சிறந்த தேர்வு. எனவே, நீங்கள் காலை நடைபயிற்சி முடிந்து வந்த பிண 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு பழங்களை சாப்பிட வேண்டும்.
நடைபயிற்சியுடன் உடற்பயிற்சி செய்தால், பழங்களைத் தவிர, புரோட்டீன் ஷேக்கும் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு ஆற்றல் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்கும்.
நீங்கள் காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியிருந்தால், அதைத் தொடர்ந்து செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், தினமும் செய்த பின்னரே, உடலில் அதன் நேர்மறையான விளைவைக் காண்பீர்கள்.
நீங்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால், உங்கள் உடல் நீரேற்றமாக இருக்கும், இதனுடன் வெள்ளரி போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu