வாழ்க்கையின் நன்னெறிகளை போதிக்கும் மகாபாரத வாசகங்களை படிங்க..

Mahabharata Quotes in Tamil

Mahabharata Quotes in Tamil-இந்தியாவில் வசிக்கும் அனைத்து இந்துக்களும் நமது புராண கதைகளான மகாபாரதம், ராமாயணத்தை நன்குஅறிந்திருப்பார்கள். இந்த இதிகாச புராணங்களிலும் உள்ள கருத்துகள் இன்றளவில் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுதலாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இந்த இதிகாச புராண கதைகளை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் . பல திரைப்படங்கள் இருந்தாலும் இதனை நாம் படித்து அறிதல் நமக்கு மன அமைதியைத் தரும். மேலும் இது சம்பந்தமாக டிவியிலும் தொடர் வெளியானது . இதனை பலரும் வாரத்தின் இறுதிநாட்களில் கண்டு களித்தனர்.
வாழ்க்கையில் நமக்கு கஷ்டம் வந்தபின்னர்தான் பலரும் கடவுளை மனதில் நினைக்கின்றனர். வாழ்க்கையில் பல விஷயங்களில் அனுபவப்பட்ட பின்னர்தான் பலருக்கும் அனுபவங்கள் வாய்ந்தவரின் ஆலோசனைகள் தேவைப்படுவது.முன்னெச்செரிக்கையாக யார் எது சொன்னாலும் பலரும் கேட்பதில்லை. ஏதோ அவர்கள் சுயநலத்துக்காக சொல்கின்றனர் என விடாப்பிடியாக விடாமல் அந்த காரியத்தில் இறங்கும் குணம் கொண்டவர்கள்இருக்கத்தான்செய்கிறார்கள். பின்னர் அவர்கள் நேரிடையாக அனுபவம் பெற்ற பின்னர்தான் அன்றே அவர் சொன்னாரே என நினைக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு செயலை செய்யும்போது யாராவது அது சம்பந்தமாக அறிவுரை சொன்னால் அதனை முதலில் காது கொடுத்து கேளுங்கள். பின்னர் காது கொடுத்து கேட்டதை வைத்து மற்றவர்களிடம் கலந்தாலோசியுங்க.. அப்புறம்தான் நீங்கள்இறுதி முடிவெடுக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அது ஆபத்தில்தான் போய்விடும். நாட்டுமக்களை அக்கால இதிகாச புராணங்களான மகாபாரதமும், ராமாயணமும் கதைகள், மற்றும் கருத்துகளின் மூலம் நெறிப்படுத்தி வருகிறது.

அந்த வாசகங்களைப் படிச்சு பாருங்களேன்....
நீங்கள் விரும்புவது ஒரு வேளை உங்களுக்குகிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
எவன் உனக்கு உதவி செய்கிறானோ அவனுக்கு மட்டும் ஒரு போதும் துரோகம் செய்யாதே. அந்த பாவத்தை நீ் எங்கு போனாலும் கழுவ முடியாது.
வெற்றியைத் தேடுபவர் ஆறு தீமைகளை கைவிட வேண்டும்: மயக்கம், சோம்பல், பயம், கோபம், சோம்பல் மற்றும் பிற்காலத்தில் வேலைக்குச் செல்வது.
இங்கு சுயநலம் கருதி செய்யும் செயல்கள் சூழ்ச்சிகள் என தாங்கள் நினைத்தால் அதற்கு நான் ஏதும் செய்ய இயலாது.
சூழ்ச்சியின் விளைவு அழிவுதான்.. அதை சகுனி செய்தாலும் சரி ஸ்ரீகிருஷ்ணர் செய்தாலும் சரி...
சிந்தித்து செயலாற்றுங்க...
நாம் எண்ணிய காரியத்தை தீர்க்கமாக நின்று செயலற்றாமல் போனதினாலேயே நாம் எண்ணிய காரியங்களை எட்ட முடியாமல் போவதற்கு காரணமாக இருக்க கூடும்
நீ நீயாக வாழ கற்றுக்கொள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார்.. கவலைப்படாதே .. இது உன் வாழ்க்கை
அழிவின் விளிம்பில் இருப்பவனை கூட காப்பாற்றிவிடலாம் ஆனால் அகங்காரத்தின் உச்சத்தில் இருப்பவரை காப்பாற்றுவது கடினமான செயலாகும்.
பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்த தேவையில்லை உணரச்செய்தால் போதும்
இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே இறைதொண்டைவிட இன்றியமையாததாகும்
நேரம் எல்லாவற்றையும் உருவாக்குகிறது, நேரம் அனைத்தையும் அழிக்கிறது. நேரம் எல்லா உயிரினங்களையும் எரிக்கிறது மற்றும் நேரம் மீண்டும் நெருப்பை அணைக்கிறது.
நீங்கள் ஒரு வேலையைத் தொடங்கினால், அது முடிந்த பின்னரே ஓய்வெடுங்கள்; இல்லையெனில், முழுமையற்ற வேலை உங்களை முடிக்கும்.
ஆர்வம், பயம் அல்லது பேராசை ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ் ஒருபோதும் நல்ல செயல்களைச் செய்ய முயற்சிக்காதீர்கள்.
ஆணவம் வீரர்களுக்கு பொருந்தாது, ஏனெனில் அது பலவீனத்தைக் காட்டுகிறது. உங்கள் ஆணவத்தை வெல்ல கற்றுக்கொள்ளுங்கள். பணிவு கற்றுக்கொள்ளுங்கள். மனத்தாழ்மை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
ஆண்கள் தங்கள் ஆர்வத்தை கருத்தில் கொள்ளும் விஷயங்களில் நல்ல தீர்ப்பை இழக்கிறார்கள்.

செழிக்க விரும்புவோர் தீய மனதிலிருந்தும் தீய நண்பர்களிலிருந்தும் விடுபட வேண்டும்.
நட்பில் காதல் இருக்கிறது. நட்பை வாழ்க்கையை விட பெரியது. நண்பரின் இதயத்தை வென்றவர், உலகத்தை வென்றுள்ளார்.
கோபத்தின் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், அது நல்லது மற்றும் கெட்டதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
வன்முறையால் தீமையைச் செய்வது துன்மார்க்கரின் சக்தி; மன்னிப்பு என்பது நல்லொழுக்கமுள்ளவர்களின் சக்தி.
வீரம் கொண்ட ஒருவர் கவனக்குறைவாக செயல்பட்டால் இன்னும் வெற்றிக்கு தகுதியற்றவர்
முதிர்ச்சியற்ற புரிதல் கொண்ட ஆண்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பதைக் கவனிக்காமல் ஒரு செயலைத் தொடங்குகிறார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு மனிதன் எந்த செயல்களைச் செய்தாலும், அந்தச் செயல்களின் பலன்களை அவை எந்த சூழ்நிலையிலும் செய்யக்கூடும்.
இந்த உலகில், பிறப்பால் ஏற்படும் உறவை விட நல்லொழுக்கங்களுக்கிடையிலான உறவு முக்கியமானது.
ஒரு நல்ல மனிதர் மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவதில் துன்பப்படுவதைப் போல ஒரு கெட்ட மனிதனும் மகிழ்ச்சியடைகிறான்.நீ நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப்போகும் எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
உறவென நினைத்தவர்களும் உடனிருப்பதில்லை அவர்களுக்கான நிலை வந்த உடன் ஆகையால் நம் நிலை எதுவென்று அறிந்து செயல்படுவோம்.

துன்பங்கள் தடைகள் அனைத்தும் உன்னை வீழ்த்தும் ஆயுதம் அல்லஅது உன்னை பக்குவப்படுத்தி உனை செதுக்கும் உளியாகும்.
உன் வாழ்வில் நீ சந்திக்கும் இன்பம் துன்பம் அனைத்துக்கும் உன் வினைகளே காரணமாக அமைகிறது நினைவில் கொள் . உன் செயல்களே உன் நன்மை தீமைகளை தீர்மானிக்கும்
நாம் நலமோடு வாழ்வதே, இந்த உலகில் உள்ள அனைவரும் நலமோடு வாழ நினைப்பதே உத்தமமான குணம்
எதையும் பேசும் முன் கவனமாக பேசுங்கள். பேசிய பின் வருந்தி பயன் இல்லை
மற்றவர்களுக்கு தீமை செய்யும்போது நினைவில் கொள் உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விரைந்து கொண்டிருக்கிறாய் என்று
சூழ்ச்சிகளால் அடையும் வெற்றி நிலையல்ல.. சூட்சமத்தால் அடையும் வெற்றியே என்றும் நிலையானது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu