மரங்களை நட்டினால் மட்டும் போதாது அதனை பராமரிப்பது எப்படி என தெரியுமா?

மரங்களை நட்டினால் மட்டும் போதாது அதனை பராமரிப்பது எப்படி என தெரியுமா?
மரங்களை நட்டினால் மட்டும் போதாது அதனை பராமரிப்பது எப்படி என அறிய தொடர்ந்து படியுங்கள்.

இயற்கையைப் பாதுகாக்க மரங்களை வளர்ப்பதும் பராமரிப்பதும் நமது கடமையாகும்.

இயற்கை என்பது நம் தாய். பூமி என்னும் இந்த அற்புதக் கோளத்தில் உயிரினங்கள் தழைத்து வாழ இயற்கையே ஆதாரம். ஆனால் மனிதனின் பேராசையால் இயற்கை வளங்கள் விரைவாகச் சுரண்டப்படுகின்றன. முன்னெப்போதையும் விட நாம் வனங்களை அழித்து வருகிறோம். இந்த தவறான போக்கை மாற்றாவிட்டால், தலைமுறை தலைமுறையாக மனிதகுலம் நேரடியாக இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


காடுகளின் அழிவுதான் தற்போது பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கு முதன்மைக் காரணமாக கருதப்படுகிறது. எனவே, மரங்களை நட்டு வளர்ப்பது, அவற்றைப் பராமரிப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. மரங்கள் இயற்கையின் அற்புத படைப்புகள். நிலக்கரி வாயுவை, அதாவது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி உயிர்காற்றாம் ஆக்ஸிஜனை அளித்து நம் உயிர் வாழ வழிவகுக்கின்றன. ஒவ்வொரு மரமும் தன் வாழ்நாளில் பல டன் நச்சு வாயுவை உயிரூட்டும் ஆக்ஸிஜனாக மாற்றும் திறன் கொண்டது.

மரங்கள் மட்டுமல்ல, அவை தரும் நிழலும் நமக்கு பலவகையில் பயன்படுகிறது. கடுமையான கோடை வெப்பத்தில் தஞ்சம் தந்து வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மைக் காக்கின்றன. மேலும் மரங்கள் நிலத்தடி நீரை சேமிப்பதிலும் மண்ணரிப்பைத் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் தீவிர ஏற்ற இறக்கங்களை மரங்கள் தணிக்கும் ஆற்றல் கொண்டவை; புயல், வெள்ளம் ஆகியவற்றின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கின்றன.


விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வாழ்விடமாகச் செயல்படுவதோடு , நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகளிலும் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமக்கு மட்டுமல்லாது உயிரினங்கள் பலவற்றுக்கும் உணவாக மரங்களே விளங்குகின்றன.

வளர்ந்த ஒரு மரத்தை வெட்டினால் பல ஆண்டுகள் ஆகும் அதே இடத்தில் இன்னொரு மரம் முழு வளர்ச்சியடைய. எனவே இருக்கும் மரங்களை காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அத்துடன் , நம் அன்றாட வாழ்க்கையில் , நம்மால் இயன்ற இடங்களில் பதிய மரக்கன்றுகளை நட்டு , அவை வளரும்வரை பராமரிக்க வேண்டும். மாடித்தோட்டங்கள், வீட்டு தோட்டங்கள் அமைத்தும் நம்மால் பசுமையைப் பெருக்க முடியும்.

மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மரம் வளர்க்க முன்வர வேண்டும். அரசு சார்பிலும் இது போன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். தன்னார்வ நிறுவனங்களும் தனிநபர்களும் தொடர்ந்து, நகரம் விரிவாக்கம் என்கிற பெயரில் மரங்களை அழிக்காமல் இருக்க குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையினருக்கு பசுமையான , வளமான எதிர்காலத்தை நம்மால் பரிசளிக்க முடியும்.

"ஒரு மரம் நடுபவன் கோயில் கட்டுபவனுக்கு சமம்". ஒவ்வொருவரும் சின்னச்சின்ன முயற்சிகளை எடுத்தாலே , மரங்கள் மூலமான இயற்கை பாதுகாப்பு சாத்தியமே.

ஒவ்வொருவரும் நமது வீட்டின் அருகில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவற்றின் கிளைகளை அவ்வப்போது கழித்து விட்டு முறைப்படி பராமரிக்கவேண்டும், தண்ணீர் விட்டாலே போதும் பெரும்பாலான மரங்களின் வேர் பட்டு போகாமல் பிழைத்துக்கொள்ளும். எனவே மரங்களை பராமரிப்பது என்று நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். மரங்களை பராமரிப்பதற்கு என்று தனி அமைப்புகளை, சங்கங்களை, தன்னார்வலர்கள், மரம் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் உருவாக்க தீவிரமாக செயல்படவேண்டும்.

Tags

Next Story