/* */

உங்கள் கனவில் பாம்பு, முதலை, வண்டுகள் போன்றவை வந்தால்... இதுதான் காரணமாம்!

கனவில், பலவிதமான விலங்குகள் நமக்கு வருகின்றன. மனிதனே, திடீரென விலங்காக மாறிவிடும் அச்சுறுத்தலான கனவுகள் கூட சிலருக்கு வந்திருக்கலாம். கனவுகளில், விலங்குகளை கண்டால் என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

உங்கள் கனவில் பாம்பு, முதலை, வண்டுகள் போன்றவை வந்தால்... இதுதான் காரணமாம்!
X

தூக்கத்தில் வரும் கனவுகளில் விலங்குகள் வருகிறதா? (கோப்பு படம்)

snakes, crocodiles, beetles etc appear in your dream- சிலருக்கு விலங்குகள் தொடர்பான கனவுகள் அடிக்கடி வரும். அதிலும் பாம்புகள் அதிகமானவர்களின் கனவுகளில் வரும். பாம்பு துரத்துவது போல், பாம்பு கடிப்பது போல், பாம்பு சீறுவது போல், இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்திருப்பது போல், நாய் துரத்துவது போல், பூனை கடிப்பது போல் கனவுகள் வரும். கனவுகளில் காணும் பொருட்களுக்கு ஏற்றது போல் அவற்றின் பலனும் மாறுபடும். இது போல் விலங்குகள் வருவதற்கு முக்கியமான விஷயத்தை உணர்த்த முயற்சிப்பது காரணமாக இருக்கலாம்.


பொதுவாக விலங்குகள் கனவில் வருவது உங்களுக்கு வரப் போகும் ஆபத்துக்கள், பிரச்சனைகள் குறித்து எச்சரிப்பதற்காக என சொல்லப்படுகிறது. அதே சமயம் சில பறவைகள், பூச்சிகளை கனவில் கண்டால் அவை நன்மையை, மகிழ்ச்சியை, செல்வம் வருவதற்கான வழியை உணர்த்தும் அறிகுறிகளாகும்.


கனவுகள் என்பது ஆழ்மனதின் பிரதிபலிப்பு என சொல்லப்படுகிறது. ஒருவர் உறக்கத்தில் இருக்கும் போது அவரை எதிர்காலம், கடந்த காலம், நிகழ்காலம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்து ஒரு கருவியாக கனவுகள் உள்ளன. வெற்றி - தோல்வி, அழுகை - சிரிப்பு, பிரியமானவர்கள் - வேண்டாதவர்கள், உணவு, காடு, விலங்குகள், இடங்கள் உள்ளிட்ட எது வேண்டுமானாலும் கனவில் வரும். இவற்றிற்கு வரையறை என்பது கிடையாது. பொதுவாக கனவுகள் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துவதற்காக அல்லது எச்சரிப்பதற்காக தான் வருகின்றன என சொல்லப்படுகிறது.


கனவு வருவதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், நாம் காணும் கனவிற்கு என்ன அர்த்தம், இதனால் என்ன பலன் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் உண்டு. சிலர் தன்னையே கனவில் காண்பார்கள். அப்படி தன்னை பற்றிய கனவுகள் இல்லாமல் விலங்குகள் அடிக்கடி கனவில் வந்தால் அதன் மூலம் ஏதோ ஒரு விஷயத்தை உங்களுக்கு உணர்த்த நினைப்பதாக அர்த்தம்.


பொதுவாக கனவில் விலங்குகள் வந்தால் நம்முடைய ஆழ்மனதில் மறைந்திருக்கும் உணர்வுகள், பயம், ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் உணர்வு என சொல்லப்படுகிறது. விலங்குகள் கனவில் வருகிறது என்றாலே பொதுவாக ஒரு விஷயத்தை உங்களுக்கு உணர்த்த நினைக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட விலங்கு உங்களின் கனவில் வந்தால் அதன் காரணத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.


எறும்புகள் :

எறும்புகளை கனவில் கண்டால் நீங்கள் கடின முயற்சி எடுத்து உழைக்கும் விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம். உங்கள் உழைப்பின் முழு பலனையும் நீங்கள் விரைவில் அடைய போகிறீர்கள் என்ரு அர்த்தம். அலுவலகம், வீடு அல்லது தொழில் செய்யும் இடம் அல்லது உங்களின் தவிப்பட்ட வாழ்க்கையில் உங்களை போன்ற ஒரு கடின உழைப்பாளியுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, நீங்கள் தலைமை பதவிக்கு உயர்வீர்கள் என்று அர்த்தம். அதே சமயம் எறும்புகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால், உங்கள் வீட்டில் விரைவில் அமைதியை பாதிக்கும் விஷயம் ஒன்று நடைபெற போவதாக அர்த்தம்.

​காளை மாடு :

காளை மாட்டினை கனவில் கண்டால் உங்களின் அழகு, வசீகரம், பலம் அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். உங்களின் செல்வ வளம் உயர போகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆண்களின் கனவில் காளை மாடு வந்தால் உங்கள் வாழ்வில் காதல் மலர போகிறது என்று அர்த்தம். அதுவே பெண்களின் கனவில் காளை மாடு வந்தால் பெரும் மனக்கஷ்டம், மன அழுத்தத்தை சந்திக்க போவதாக அர்த்தம்.


முதலை :

முதலையை கனவில் கண்டால் பெரும் துன்பம் வரப் போகிறது என்று அர்த்தம். முதலை உங்களை தாக்குவதாக கனவு கண்டால் பெரும் சிக்கல்கள் வரப் போகிறது என்பதற்காவ அறிகுறியாகும். முதலையை விட நீங்கள் பலசாலியாக இருந்து அதனுடன் சண்டையிடுவது போல் கனவு கண்டால் வரப் போகும் பிரச்சனைகளை நீங்கள் தவிடுபொட்டியாக்கி விடுவீர்கள் என்று அர்த்தம்.


வெளவ்வால் :

வெளவ்வாலை கனவில் கண்டால் அது பயத்தை குறிப்பதாகும். வெளவ்வால் உங்களை தாக்குவதாக கனவு கண்டால் நீங்கள் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெளவ்வால் குகையில் ஓய்வு எடுப்பதை கனவில் கண்டால் உங்களின் பயம் அர்த்தமற்றது என்று பொருள். அதனால் உங்களுக்கு கெடுதலோ, பாதிப்போ ஏதும் ஏற்படாது என்று அர்த்தமாகும்.

வண்டுகள் :

வண்டுகளை கனவில் கண்டாலோ அல்லது 6 முதல் 8 கால்களை கொண்ட பூச்சிகளை கனவில் கண்டாலோ பல மடங்கு அதிகமான பிரச்சனைகள் உங்கள் வாழ்வில் வரப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து விடுவீர்கள் என நம்பிக்கையுடன் இருங்கள்.


தேனீக்கள் :

தேனீக்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டை தேடி சில மகிழ்ச்சியான விஷயங்கள் வரப் போகிறது என்று அர்த்தம். அதிர்ஷ்டம், நல்ல செய்தி உங்களைத் தேடி வரப் போகிறது என்று அர்த்தம்.

Updated On: 30 July 2023 3:10 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு