கோடைகால வெயிலால் உங்கள் முகம் கருத்துவிட்டதா?

கோடைகால வெயிலால் உங்கள் முகம் கருத்துவிட்டதா?
X

Face care during summer heat- முகம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தெரிந்துக்கொள்வோம் (கோப்பு படம்)

Face care during summer heat- கோடை காலம் துவங்கி விட்டது. வெளியில் சென்றாலே கொளுத்தும் வெயிலால் முகம் கருத்து விடுகிறது. இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Face care during summer heat- கோடைகால வெயிலால் உங்கள் முகம் கருத்துவிட்டதா? - சன் பர்ன் தடுக்கும் குறிப்புகள்

கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே நம்மில் பலருக்கு ஏற்படும் முதல் கவலை சருமத்தில் ஏற்படும் கருமை (tan) தான். வெயிலின் தாக்கத்தால், நமது உடலில் மெலனின் என்ற நிறமி அதிக அளவு உற்பத்தியாகிறது. அதன் காரணமாகவே இந்த கருமை ஏற்படுகிறது. பலர் இதனை ஒரு அழகு குறைபாடாக கருதுகின்றனர். கோடையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது என்பது இயலாத காரியம். எனவே இந்த சருமக் கருமையைத் தவிர்ப்பதற்கான சில எளிய மற்றும் பயனுள்ள வழிகளை இங்கே காணலாம்.

சிறந்த சன்ஸ்கிரீன் தேர்வு முக்கியம்

சன் பர்ன் எனப்படும் வெயில் கருமையைத் தவிர்க்க மிக முக்கியமான விஷயம் நல்ல தரமான சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது. குறைந்தது SPF 30 கொண்ட, 'broad spectrum' பாதுகாப்பு அளிக்கும் சன்ஸ்க்ரீனை தேர்வு செய்யுங்கள். இது UVA மற்றும் UVB என்கிற இரண்டு வகை புற ஊதா கதிர்களில் இருந்தும் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். மேலும், தண்ணீரில் கரையாத (water-resistant) சன்ஸ்க்ரீன் ஆக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


வெளியில் செல்வதற்கு முன்...

வெளியில் செல்வதற்கு குறைந்தது 15-20 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்க்ரீன் தடவிக் கொள்ளுங்கள். இது சன்ஸ்க்ரீன் உங்கள் சருமத்தில் நன்றாக உறிஞ்சிக் கொள்ள நேரம் அளிக்கிறது. உடல் முழுவதும், குறிப்பாக வெயிலுக்கு அதிகம் வெளிப்படும் கை, கால்கள், கழுத்துப் பகுதிகளில் நன்றாகத் தடவுங்கள். முகத்தில் பயன்படுத்தும் போதும் நெற்றி, காதுகள், உதடுகள் ஆகியவற்றை மறக்காதீர்கள்.

சன்ஸ்க்ரீன் என்றால் போதாது

மற்ற உடைகள் மூலமாகவும் உங்களின் சருமத்தைப் பாதுகாக்க முடியும். இறுக்கம் இல்லாத, காற்றோட்டமான பருத்தி ஆடைகள் வெயிலுக்கு ஏற்றவை. முழுக்கை சட்டைகள், நீளமான கால்சட்டைகள் உங்களை நேரடியாக வெயில் தாக்குவதிலிருந்து தடுக்கின்றன. கூடுதல் பாதுகாப்புக்கு தொப்பி மற்றும் சன்கிளாஸ் பயன்படுத்துங்கள். சன்கிளாஸ் வெறும் ஸ்டைலுக்காக அல்ல; அவை புற ஊதாக் கதிர்களிடமிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்கும்.


வெயிலின் உக்கிர நேரம்

நண்பகல் 10 மணி முதல் மாலை 4 மணிவரை சூரியனின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். முடிந்தளவு இந்த நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அத்தியாவசியமாக வெளியில் சென்றுதான் ஆகவேண்டும் என்றால் இதர பாதுகாப்பு ஏற்பாடுகளை தவறாமல் செய்யுங்கள்.

இயற்கை வழிகளும் உதவும்

தயிர்: குளிப்பதற்கு முன் தயிரை முகம் மற்றும் வெளிப்படும் பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிக்கலாம். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை பொலிவாக்கும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால், கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும். அதே சமயம், எலுமிச்சை சாற்றை அதிக நேரம் முகத்தில் பூசியவாறு வைத்திருக்க வேண்டாம்.

அலோ வேரா (கற்றாழை): கற்றாழையின் ஜெல் சருமத்திற்கு இதமளிப்பது மட்டுமின்றி, வெயிலினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகும்.


உணவு முறையும் முக்கியம்

சரும ஆரோக்கியத்திற்கு வெளிப்புற பராமரிப்பு மட்டும் போதாது; சரிவிகித உணவும் இன்றியமையாதது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சருமத்தை உள்புறத்தில் இருந்து நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

சன் பர்ன் பிரச்சினையை பெரிதாக கவலைப்படாமல், சரியான பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால், கோடை காலத்தையும் பயமின்றி அனுபவிக்க முடியும்!

Tags

Next Story
ai in future agriculture