Exam stress-தேர்வு பயத்தை போக்க எளிய வழிகள்!

Exam stress -தேர்வு பயத்தை போக்க எளிய வழிகள் (கோப்பு படம்)
Exam stress -தேர்வு பயத்தை போக்க எளிய வழிகள்!
10 மற்றும் 12ம் வகுப்பு இறுதித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல தேர்வு என்றாலே பலருக்கும் அச்ச உணர்வு ஏற்படும். தேர்வில் தங்களால் முடிந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அனைத்து குழந்தைகளிடமும் இருக்கிறது. எந்தப் பரீட்சையாக இருந்தாலும், பெரும்பாலான குழந்தைகள் அதைப்பற்றிய மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை சரிசெய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பல சமயங்களில் குழந்தைகள் நேரம் பாராமல் படிப்பதில் மும்முரமாக படிப்பார்கள். முன்பு எழுதிய தேர்வை விட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என மிக கவனமாக இருப்பார்கள். ஆனால் பலருக்கும் அது நடப்பதில்லை. காரணம் மனஅழுத்தத்தினால் தாங்கள் படித்த அனைத்தையும் மறந்தவிடுகிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வருவது பெற்றோர்கள் பொறுப்பு. இதை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
குழந்தைகளின் தேர்வு அழுத்த அறிகுறிகள்
குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தின் அறிகுறிகளை புரிந்துக் கொள்வது மிக அவசியம். குழந்தைகள் தேர்வு அழுத்தத்தில் இருந்தால் எப்படி புரிந்துக் கொள்வது என்பது குறித்து பார்க்கலாம்.
உங்கள் குழந்தை திடீரென்று மிகவும் அமைதியாகவும் சோகமாகவும் மாறினால், மன அழுத்தத்தில் உணருகிறார்கள் என்று அர்த்தம். குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவதையே நேரத்தை வீணடிப்பதாகக் கருதுவார்கள்.
தேர்வு மன அழுத்தம் காரணமாக, குழந்தை தனது உணவில் கவனம் செலுத்துவதில்லை. அதேபோல் சில நேரங்களில் குழந்தை மன அழுத்தத்தினால் தங்கள் கட்டுப்பாடு தெரியாமல் அதிக உணவை உண்ணத் தொடங்குகிறார்கள்.
பரீட்சை மன அழுத்தத்தால் குழந்தைகள் எரிச்சலடைய ஆரம்பிக்கிறார்கள். பல சமயங்களில் குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்திலும் கோபத்தைக் காட்டுகிறார்கள்.
மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் தூங்குவதை தவறவிடுகிறார்கள். குழந்தை இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து காலை எழுந்திருக்க தாமதமானால் பெற்றோர்கள் அவர்களிடம் கலந்துரையாட வேண்டும்.
தேர்வு மன அழுத்தத்தை போக்கும் வழிகள்
குழந்தை 24 மணிநேரமும் படிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. குழந்தைகளின் கல்விக்கு ஒரு அட்டவணை அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு அட்டவணையை அவர்கள் விளையாடுவதற்கும், உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.
நீண்ட நேரம் படிப்பது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். அவ்வப்போது படிப்பில் இருந்து ஓய்வு எடுப்பது குழந்தைகளின் சுமையை குறைக்கிறது மற்றும் அவர்களின் கவனத்தை அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்
குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமெனில் படிப்பு தொடர்பாக அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்காதீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் பல கேள்விகளைக் கேட்டால், அது அவர்களின் மூளையைப் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், குழந்தை அழுத்தத்திற்கு ஆளாகிறது மற்றும் மன அழுத்தத்தை உணர ஆரம்பிக்கிறது.
குழந்தைகளின் பிரச்சனைகளை கேட்டறியுங்கள்
தேர்வு மன அழுத்தம் காரணமாக, குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களை சந்திக்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளின் பிரச்சனைகளை நீங்கள் கேட்கும்போது, அவர்கள் நன்றாக உணர்கிறார்கள் மற்றும் அது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு விளக்கம் அவசியம்
நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கும்போது, குழந்தைகளுக்கு தேர்வு மன அழுத்தம் அதிகரிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும். தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu