/* */

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.....

Ematram Quotes in Tamil-நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... ஒன்றுமில்லை...என்ற பாடல் வரிக்கு ஏற்ப நாம் நினைப்பதெல்லாம் நடக்காது... ஏமாற்றமும் இருக்கும்....

HIGHLIGHTS

Ematram Quotes in Tamil
X

Ematram Quotes in Tamil

Ematram Quotes in Tamil

உலகமானது சக்கரம்போன்று சுற்றிக்கொண்டேதானிருக்கிறது. இன்று வருவது நாளை வராது. அதேபோல் நாளை வருவதும் நாளை மறுநாள் வராது. ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களைக் கொண்டது இவ்வுலகம். எது எப்போது நடக்கும் என யாராலும் அறுதியிட்டும் சொல்லிவிட முடியாது.

அக்காலத்தில் இருந்த நேர்மை, நாணயம், நம்பிக்கை எல்லாம் தலைகீழாகிவிட்டது. பண்பாட்டு சிதைவு என்று கூட சொல்லலாம்.சொல்லப்போனால் தெரியாதவர்களைவிட தெரிந்தவர்களிடம் ஏமாறுவதுதான் வெளியே சொல்ல முடியவில்லை.அந்த அளவுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசுவார்கள். பேசுகிறார்கள்... என்ன செய்ய ... இருப்பதை அவசரம் என கொடுத்துவிட்டு கடைசியில் நமக்கு பட்டை நாமம் சாற்றிவிடுவதைத்தான் பார்க்க முடிகிறது.

அதுவும் ஒவ்வொரு நாளும் செய்திகளைப் படித்தோமானால் உழைக்காமல் ஏமாற்றவே ஒரு கூட்டம் புதியதாக புறப்பட்டது போல் தோன்றும். அந்த வகையில் அவ்வளவு செய்திகள் வருகின்றன. ஏன் என்ன காரணம்? ஆம். நம் சமூகத்தில் பெரும்பாலானோர் உழைக்காமல் முன்னேற முடிவெடுத்துவிட்டனர். ஆம் .. உழைக்காமல் முன்னேறவேண்டும் எனில் மற்றவர்களை ஏமாற்றி பிழைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் திருடவேண்டும். திருடினால் போலீசில் மாட்டினால் சிறை, ஜெயில்.. ஆனால் நமக்குதான் தெரிந்த இளிச்சவாயன்கள் நிறைய பேர் இருக்கிறார்களே என ரூம்போட்டு யோசித்து ஏமாற்றுகிறது ஒரு கும்பல்.. ஏமாந்தவர்கள் வெளியே சொல்லவும் முடியாது. எல்லாம் கருப்பு பணம் என்ன செய்ய...இது ஏமாற்றுபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.

அண்மையில் திருவண்ணாமலையில் ஒரு நிறுவனத்தினை போலீசார் கண்டுபிடித்து இதற்கான வழக்கு கூட இப்போது நடந்து வருகிறது. ஏங்க... எங்க பாதுகாப்புக்கு இடம் இருக்கிறதோ அங்குகொண்டு போய் பணத்தினை முதலீடு செய்யுங்க... தேவையில்லாத டுபாக்கூர் நிறுவனத்திடம் போட்டுவிட்டு பின்னர் நாம் அலைவது தேவையில்லாத ஒன்று... இனிக்க இனிக்க பேசி கடைசியில் வேலை முடிந்தவுடன் ஆளே அட்ரஸ் இல்லாமல் சுத்தமாக காலி செய்துவிடுகிறார்கள்...இதுதாங்க நிலைமை. உங்க பணம் பாதுகாப்பா இருக்கணும் அரசு மற்றும் நம்பிக்கையான தனியார் நிறுவனங்களில் முதலீடு பண்ணுங்க....

ஏமாற்றத்திற்கான வாசகங்களைப் பற்றி பார்ப்போம்...

பாசம் கண்ணை மறைக்குதோ இல்லையோ ஏமாற்றம், வெறுப்பு, துரோகம் உறவினை அடியோடு இ ல்லாமல் செய்துவிடும்..

இந்த உலகத்தில் உண்மையான அன்பிற்கும் பாசத்திற்கும் கிடைத்த பரிசு ஏமாற்றம்

துாக்கி எறிந்த பின்னர்தான் தெரிகிறது சிலருக்கு கையில் இருந்தது கல் இல்லை வைரம் என்று.

உறவு இல்லாதவர்களிடம் மட்டுமல்ல உரிமை உள்ளவர்களிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே..

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் நாள்தோறும் புதியதாய் இருக்கிறது. சில நேரம் அன்பால்.. சில நேரம் நம்பிக்கையால்..

யாரும் என்னை ஏமாற்றினால் நான் ஏமாந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. நான் அவர்களை அதிகமாக நம்பினேன் என்று அர்த்தம்

ஏமாந்து போறதவிட பெரிய வலி, நாம ஏமாந்துட்டு இருக்கோம்னே தெரியாம இருக்குறதுதான்...

ஏமாற்றி பிழைப்பதுபுத்திசாலித்தனம் ஆகிவிட்டதால்நேர்மையாக வாழ்பவன் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.

ஏமாளியாக இருப்பதுஅவமானம் இல்லைஏமாற்றப்பட்டாலும்பிறரை ஏமாற்றாமல்இருப்பதே நமக்கு பெருமை!

ஏமாற்றம் என்பதுவேறு ஒன்றுமில்லைஇனி அடுத்தவரிடம்எச்சரிக்கையாய் பழகஓர் அலாரம்!

கத்தியால் குத்தினால் கூடஒரு நிமிடம் தான் வலி!ஆனால் அன்பை காட்டிஏமாற்றினால் ஒவ்வொருநிமிடமும் "வலி" தான்.

ஏமாற்றியவர்களுக்கு நன்றிஅவர்கள் ஏமாற்றத்தைசொல்லி தரவில்லை!

இனி ஏமாறாமல் இருக்கஅனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதே!ஏனென்றால் எதிர்பார்பதால் மட்டுமேநாம் ஏமாற்றத்திற்கு ஆளாகிறோம்.

இன்று நீ எனக்கு செய்ததுரோகத்தின் வலிநாளை நீ நம்பிய ஒருவர்

உன்னை ஏமாற்றும் போதுஅதன் வலி உனக்கு புரியும்!

நீ வருவாய் என்றுகாத்திருந்த எனக்குநீ தந்த பரிசு ஏமாற்றமே!

உயிருடன் வாழும் போதேமரணத்தை பார்த்தவர்கள்அளவுக்கு மீறிய அன்பு

வைத்து ஏமாற்றம்அடைந்தவர்கள்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்உடன் பிறப்புகள்!ஒன்றை தொடர்ந்தேஇன்னொன்று பயணிக்கும்!

ஏமாற்றங்களை நேசிக்கிறேன்அது மட்டுமே என்னை ஏமாற்றாமல்தினம் தினம் ஏமாற்றுகிறது.

ஏமாந்து போவதற்குமுட்டாளாக இருக்க வேண்டும்என்று அவசியம் இல்லை.

அன்புக்கு ஏங்கும் மனம்கொண்டவர்களாகஇருந்தாலே போதும்.

ஏமாற்றமே வாழ்க்கைஎன வாழ்ந்தவன்!எப்போது விடிவு கிடைக்கும்என்று தெரியாமல் ஏமாறுகிறேன்.

எவ்வளவு தான் கதறிஅழுதாலும் அன்பால்ஏமாற்றப்பட்ட வலிகள்மட்டும் குறைவதே இல்லை.

எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க... நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்லை.

ஏமாறியதற்கும் ஏமாற்றியதற்கும் இடையே நம்பிக்கையின் கழுத்தை இறுகப்பிடிக்கிறது சொல்லப்படாத சில உண்மைகள்

ஆயிரம் மாற்றம் வந்தாலும் மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்வாழ்க்கையில் மாற்றம் வருதோ இல்லையோ ஆனா ஏமாற்ற்ம அதிகமாகவே வருது

ஏமாற்றம் வலியை தந்தாலும் நல்வழியையும் காட்டும் வாழ்க்கைக்குஒருவனை ஏமாற்றி விட்டதால் அவனை முட்டாள் என்று நினைக்காதே நீ ஏமாற்றியது அவன் உன் மேல் வைத்த நம்பிக்கையை

வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள்தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாக பேசுவார்கள் இவ்வளவுதான் மனிதர்களின் உலகம்

ஒருவனை ஏமாற்றி விட்டதால் அவனை முட்டாள் என்று நினைக்காதே நீ ஏமாற்றியது அவன் உன் மேல் வைத்த நம்பிக்கையை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 April 2024 4:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!