ஏங்க...மனசு சரியில்லைங்களா.?.. காமெடி விடுகதையை படிச்சு பாருங்க....

ஏங்க...மனசு சரியில்லைங்களா.?..  காமெடி விடுகதையை படிச்சு பாருங்க....
X
Comedy Vidukathai in Tamil with Answer-வாழ்க்கையில் துன்பம் வந்தால் மனசு அப்செட் ஆகக்கூடாது. துன்பம் வரும் வேளையில் சிரிங்க... வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னேன்.....

Comedy Vidukathai in Tamil with Answer

வாழ்க்கைன்னா மன இறுக்கம் இருக்கத்தான் செய்யுங்க...அப்பப்ப இந்த மனஇறுக்கத்துக்கு நாமதான் மருந்து தேடிக்கணும்...மருந்துன்னா சாப்பிடக்கூடிய மருந்து இல்லைங்கோ...

வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்னு கேள்விப்பட்டிருப்போம்ங்க... அதனால நம்ம மனசு சரியில்லைன்னா எப்பவும்கலகலப்பா இருக்கிற இடத்துக்கு போயிடனும்ங்க.. அல்லது டிவியில் நம் மனசை பாதிக்காத வகையில் உள்ள நிகழ்ச்சிகளான காமெடி சீன்களை கொஞ்சநேரம் பார்த்தா உங்க மன இறுக்கம் குறைந்து போயிடுங்க..

ஒரு சிலரை பார்த்திருப்பீங்க.. மனசு சரியில்லைன்னு சொல்லிட்டு யாரிடமும் பேசாம போய் மூலையில் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடுவாங்க...இதுபோன்று இருப்பவர்களுக்கு ரத்தஅழுத்த நோய் வர வாய்ப்பு அதிகம்னு டாக்டர்கள் சொல்கின்றனர்.

விடுகதைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்த மற்றும் ஆர்வமான ஒன்று. அதுலயும் காமெடி கலந்த விடுகதை என்றால் சொல்லவே வேண்டாம் போங்க... கூட்டம்னா கூட்டம் சேர்ந்துடும். சிரிப்பு சத்தத்திற்கு அளவே இருக்காது. வாண்டுஸ்கள் சொல்லிக்கிட்டுவிளையாடும்போது நமக்கே மலரும் நினைவுகள் போல் பால்ய பருவ ஞாபகங்கள் வந்துடும். இந்த காமெடி விடுகதைகள் எப்பவும் சிரிப்பாகவும் சிந்திக்க வைக்ககூடியதாகவே இருக்கும் .வாங்கோ படிக்கலாம்...

அகராதியில் எந்த வார்த்தை தவறாக எழுதப்பட்டுள்ளது?விடை: தவறு

எல்லா நேரத்தையும் தரையில் செலவழிக்கும் ஆனால் அழுக்காகாது?விடை: உங்கள் நிழல்.

வருடத்தில் எத்தனை மாதங்களில் 28 நாட்கள் உள்ளன?விடை: அனைத்து மாதத்திலும்

ஒரு மனிதன் கடும் மழையில், எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வெளியே செல்கிறான். அவரது தலைமுடி ஈரமாகவில்லை?

விடை: அவருக்கு வழுக்கை

கோழியின் எந்தப் பகுதியில் அதிக இறகுகள் உள்ளன?விடை: வெளிப்பகுதியில்

எது மேலும் கீழும் செல்கிறது ஆனால் ஒருபோதும் நகராது?விடை: படிக்கட்டுகள்

பத்து பெண்கள் ஒரு சிறிய குடையின் கீழ் நின்றனர், அவர்கள் யாரும் நனையவில்லை. அது எப்படி?

விடை: மழை பெய்யவில்லை

ஆங்கில அகராதியில் உள்ள எந்த 5 எழுத்து வார்த்தைகளை அதன் 4 எழுத்துக்கள் நீக்கியிருந்தாலும் ஒரே மாதிரியாக உச்சரிக்க முடியும்?

விடை: 'Q'ueue

உங்கள் வலது கையில் நீங்கள் எளிதாகப் பிடிக்கக்கூடிய ஒன்று, ஆனால் இடது கையால் பிடிக்க முடியாது அது என்ன?

விடை: இடது கை

L என்ற எழுத்தில் தொடங்கி, R என்ற எழுத்தில் முடிவடையும், அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கும். அது என்ன?விடை: Letter

நியூசிலாந்தில் வசிக்கும் ஒரு பெண்ணை ஆஸ்திரேலியாவில் ஏன் அடக்கம் செய்யக்கூடாது?

விடை: ஏனென்றால் அவள் உயிருடன் இருக்கிறாள்.

எத்தனை முறை திறந்து மூடினாலும் ஓசை வராத கதவு எது?விடை: கண் இமை

உடைத்தால் தான் உபயோகப்படுத்த முடியும் அது என்ன?விடை: முட்டை

இளமையாக இருக்கும்போது உயரமாகவும், வயதாகும்போது குட்டையாக மாறும் அது என்ன?விடை: மெழுகுவர்த்தி

எப்பொழுதும் நமக்கு முன்னால் இருக்கும் ஆனால் நம்மால் பார்க்க முடியாது அது என்ன?விடை: எதிர்காலம்

காலை உணவுக்கு நீங்கள் சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?விடை: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

எந்த மாதத்தில் மக்கள் குறைவாக தூங்குவார்கள்?விடை:​பிப்ரவரி குறுகிய மாதம்

ராமுவின் தாய்க்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். முதல் குழந்தைக்கு ஏப்ரல் என்று பெயரிடப்பட்டது இரண்டாவது குழந்தைக்கு மே என்று பெயரிடப்பட்டது. மூன்றாவது குழந்தையின் பெயர் என்ன?விடை: ராமு

எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் , உலகின் மிக உயரமான மலை எது?

விடை: அது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் பயணம் செய்யக்கூடியது, ஆனால் எப்போதும் ஒரு மூலையில் இருக்கும், அது என்ன?

விடை: முத்திரை

ஒரு எறும்பை கட் பண்ணா என்ன ஆகும்?விடை: கட்டெறும்பு

கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு இருந்த கொசு திடீர்னு இறந்து போச்சு எப்படி?-விடை:இந்தியா டீம் ஆல்அவுட்

ஒரு யானை வேகமா ரேஷன் கடைக்கு ஓடுது?யானை ரேஷன் கடையில் போய் என்ன வாங்கும்?விடை:மூச்சு வாங்கும்

எலிக்கு ஏன் வால்இருக்கு?விடை:செத்துபோச்சுனா துாக்கி போடதான்எலிக்கு வால் இருக்கு

எந்த எழுத்தை எழுத முடியாது?விடை:தலையெழுத்து

எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது?விடை:ஐயர் ஆத்துல

எந்த கடிகாரம்கரெக்டா டைம் காட்டுங்க?விடை :கடிகாரம் காட்டாது நாமதான் பார்க்கணும்

கடற்கரையில் வீடு கட்டினா என்ன ஆகும்?விடை:பணம் செலவாகும்

மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வரவே வராது அது என்ன?விடை:வயது

எந்த காட்டுலயும் கிடைக்காத பூச்சி எந்த பூச்சி?விடை :கண்ணாம்பூச்சி

டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தா என்ன அர்த்தம்?விடை:அது தடுப்பூசியாம்

ஒருத்தர் 15 மணி நேரத்துக்கும் மேலாக சேரில் உட்கார்ந்து இருந்தாராம் ஏன்?விடை :சேர்மேன்

தேர்வறைக்கு போய் ஒருத்தன் திரும்பி வந்துட்டானாம் ஏன்?விடை :ரிட்டர்ன் எக்ஸாமாம்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
application of ai in agriculture