/* */

வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்

சுட சுட வெள்ளை சாதத்துடன் வாழை இலை ரசம் சேர்த்து பிசைந்து சாப்பிடடால்.....அட அட செம டேஸ்ட்டா இருக்கும்.

HIGHLIGHTS

வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
X

பைல் படம்.

தேவையான பொருட்கள்:

சிறிய பிஞ்சி வாழை இலை - 1

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - ஒரு தேக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

பூண்டு - 8 பல்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு, பெருங்காயம், வெந்தயம் - தாளிக்க

வாழை இலையை நன்றாக கழுவிய பின்னர் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக வெட்டிகெள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இளம் வாழை இலை, பூண்டு, மிளகு, சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலா நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூடான சுவையான ஆரோக்கியமான வாழை இலை ரசம் ரெடி. இதனை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சூப் போன்றும் குடிக்கலாம்.காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

Updated On: 1 April 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!