/* */

அன்பு மொழி பேசுங்க. ஆண்டவனும் உங்ககிட்ட பேசுவார்.

Anbu Quotes in Tamil-அன்பு மட்டுமே கடவுளின் மொழி. அன்பு மூலம் நீங்கள் கடவுளுடனும் பேசலாம், இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுடனும் பேசலாம். அன்பே உலகளாவிய மொழி.

HIGHLIGHTS

Anbu Quotes in Tamil
X

Anbu Quotes in Tamil

Anbu Quotes in Tamil

அனைத்து உயிர்களையும் படைத்து, அவை உயிர்வாழத் தேவையான அத்தனையையும் கொடுத்த இறைவன் அவை பேசுவதற்கு ஒரு மொழியை மட்டும் கொடுக்காமலா விட்டிருப்பார். உண்மை என்னவென்றால் அன்பென்னும் மொழி மூலம் நம்மால் விலங்குகளுடன் பேச முடியும். ஆனால் நாம் தான் அன்பென்னும் மொழியில் பேசுவதில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் வள்ளுவர். அன்பே சிவம் என்பது சிவநெறியை பின்பற்றுபவர்கள் நம்பிக்கை. அன்பு என்பது வார்த்தைகள் தேவையில்லா அற்புத மொழி. அதை பேசக் கற்றுக்கொள்ளுங்கள், ஆண்டவனும் உங்களுடன் பேச ஆசைப்படுவார்.

அன்பு குறித்து அறிஞர்களின் அற்புதமான பொன்மொழிகள்

அன்னை தெரேசா: அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது.

மகாத்மா காந்தி: எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.

தலாய் லாமா: அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும்.

மார்ட்டின் லூதர் கிங்: நாம் மன்னிக்கும் திறனை வளர்த்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் ஆற்றல் இல்லாதவன் அன்பு செய்யும் ஆற்றல் இல்லாதவன்.

நெப்போலியன் ஹில்: அதிகமாக நேசித்தால் நீங்கள் காயப்படக்கூடும், ஆனால் குறைவாக நேசித்தால் நீங்கள் துன்பத்தில் வாழ்வீர்கள்.

சோஃபோக்கிள்ஸ்: ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்து சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்தும் விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு.

மகாத்மா காந்தி: ஒரு நாட்டின் மகத்துவத்தை அதன் விலங்குகள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிட முடியும்.

மாதா அமிர்தானந்தமயி: ஒருவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவராக இருக்கும்போது, அவரால் இரண்டு நாடுகள், இரண்டு நம்பிக்கைகள் அல்லது இரண்டு மதங்களுக்கு இடையே ஒரு கோட்டை வரைய முடியாது.

அன்னை தெரேசா: இந்த உலகை வெல்வதற்கு நாங்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த வேண்டாம். அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துவோம்.

மார்டின் லூதர் கிங்: நான் அன்போடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வெறுப்பு என்பது தாங்க முடியாத ஒரு சுமை.

தலாய் லாமா: மூச்சை உள்இழுக்கும் போது, உங்களை நீங்களே நேசியுங்கள். மூச்சை வெளிவிடும் போது, எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

கெளதம புத்தர்: நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள்.

சார்லி சாப்ளின்: புத்திசாலித்தனத்தை விட, நமக்கு அன்பும் கருணையுமே தேவை.

பிளேட்டோ: எங்கே அன்பு ஆட்சி செய்கிறதோ, அங்கே சட்டங்கள் தேவையில்லை.

தீபக் சோப்ரா: செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது மற்றும் அன்பு இல்லாத செயல் பொருத்தமற்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 March 2024 8:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்