/* */

செல்ஃபி மோகம் - 140 அடி பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட காவல்துறை

கர்நாடகாவில் நீர்வீழ்ச்சி அருகில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கும்போது தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்தவர் உயிர் தப்பினார்

HIGHLIGHTS

செல்ஃபி மோகம் - 140 அடி பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட காவல்துறை
X

140 அடி பள்ளத்தில் விழுந்து உயிர் தப்பியவர்

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்திலுள்ள கோகாக் நீர் வீழ்ச்சிக்கு பிரதீப் சாகர் என்ற இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞர் நீர்வீழ்ச்சி அருகே பாறையில் நின்று கொண்டு தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக கோகாக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரதீப்பைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் பிரதீப் இறந்திருக்கலாம் எனக் கருதி தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

யாரும் எதிர்பாராத விதமாக பிரதீப் அதிகாலை 4 மணியளவில் அவரது நண்பர்களைத்தொடர்பு கொண்டு, தான் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்து, தனது இருப்பிடத்தைத் தெரிவித்தார். உடனடியாக அவரது நண்பர்கள் சமூக ஆர்வலர் அயூப்கானிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து நீர்வீழ்ச்சிக்கு அருகில் 140 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த பிரதீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 4 Oct 2021 5:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி