/* */

மூன்றாம் பாலின தம்பதியின் முதல் குழந்தையை வரவேற்றது இந்தியா

கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதியான சஹத்-சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

மூன்றாம் பாலின தம்பதியின் முதல் குழந்தையை வரவேற்றது இந்தியா
X

பைல் படம்.

கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதி சஹத்- சியா. இதில் சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். அதேபோல சியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அறிந்துகொண்ட இத்தம்பதி, மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக சஹத் கருவுற்றார்.

அண்மையில் சியா பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சஹத்தின் மகப்பேறு கால புகைப்படங்களை பதிவு செய்ததோடு, தங்களின் மூன்று வருட கனவு நிறைவேற போவதாகவும், அம்மா என்ற அழைப்புக்கு காத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இணையத்தில் இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் சஹத்- சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையினை தொடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சியா பவல், தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Feb 2023 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க