/* */

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: யாருக்கும் ஆதரவு இல்லை என மம்தா அறிவிப்பு

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: யாருக்கும் ஆதரவு இல்லை என மம்தா அறிவிப்பு
X

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதியகுடியரசு துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மே.வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர் களமிறங்கி உள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில், மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் தேர்வில் தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Updated On: 23 July 2022 5:53 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்