/* */

வரி விதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

நிதி சேவை, சேவை வழங்குவதை எளிதாக்குதல், நலத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது முக்கியம்-வெங்கையா நாயுடு

HIGHLIGHTS

வரி விதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
X

தாமாக வரி செலுத்துவதை ஊக்குவித்து, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வரி நடைமுறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தியுள்ளார்.

சிக்கலான மற்றும் கடினமான நடைமுறைகளை மாற்றியமைக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அவர், நிலையான, பயனாளருக்கு உகந்த மற்றும் நாட்டில் வெளிப்படையான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரி பயிற்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற இந்திய வருவாய் பணி (வருமானவரி), பயிற்சி அதிகாரிகளின் 74-வது அணியின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர், வெளிப்படையான மற்றும் வரிசெலுத்துவோருக்கு உகந்த நிர்வாகத்தை ஏற்படுத்துவதை நோக்கிய நமது முயற்சியில் தொழில்நுட்பம் பேருதவி செய்வதாக குறிப்பிட்டார். "உள்ளார்ந்த நிதி சேவை, சேவை வழங்குவதை எளிதாக்குதல் மற்றும் நலத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.

குடிமைப்பணி அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் அதிக திறன் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் தங்களது சேவையில் உயர் தரத்தை உருவாக்குவதோடு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக நடைமுறைகளை மேம்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். "தற்போதைய நிலையே தொடர்வதில் நமக்கு உடன்பாடு இல்லை. நமது சுயராஜ்ஜியத்தை நல்லாட்சியாக மாற்றுவதையே நாங்கள் விரும்புகிறோம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

வரிவசூல் மூலம் தேசத்தைக் கட்டமைப்பதில் இந்திய வருவாய் பணி அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட திரு.நாயுடு, வரிசட்டங்கள் மற்றும் நடைமுறைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக மாற்றுவதன் மூலம் நாட்டின் குடிமக்கள் உரிய நேரத்தில் மனமுவந்து, சிரமமின்றி வரிசெலுத்த வகை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மகா பாரதத்தில் உள்ள ஒப்புமை ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், ஆட்சியாளர் என்பவர், மலர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், மலர்களிலிருந்து தேனை உறிஞ்சும் தேனீக்கள் போல, மக்களிடமிருந்து வரிவசூல் செய்பவராக இருக்க வேண்டும் என்றார்.

தொடர் மேல்முறையீடுகளை தவிர்க்கும் வகையிலான சச்சரவு மேலாண்மை, முக அறிமுகமற்ற நிர்வாகம் மற்றும் வரிசெலுத்துவோரின் ஆவணங்களை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களுக்காக மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு குடியரசு துணைத் தலைவர் பாராட்டுத் தெரிவித்தார். "வரிசெலுத்துவோருக்கும், வரிவிதிப்போருக்கும் இடையேயான கலந்துரையாடல்கள் நம்பிக்கை உணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை போன்றவற்றை கொண்டதாக இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

Updated On: 29 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...