/* */

திருமணத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரிவால்வர் ரீட்டா

திருமண வைபவத்தின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட மணமகளை உத்தரபிரதேச மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருமணத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரிவால்வர் ரீட்டா
X

திருமண விழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் மணப்பெண்.

திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 முறை மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத்துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சலேம்பூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மணமகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணமகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் திருமணக் கொண்டாட்டத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் வழக்கமாக உள்ளன. தனது திருமண வைபவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 தடவைகள் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத்துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சலேம்பூர் எனும் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இது குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மணமகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.

வீடியோவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணமகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வட இந்தியாவில் திருமணக் கொண்டாட்டத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் வழக்கமாக உள்ளன.

எனினும், 2019 ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதங்கள் தடை சட்டம் மூலம் இந்த கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 2 ஆண்டு சிறை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Updated On: 10 April 2023 5:12 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!