திரிபுராவின் முதல் பெண் முதல்வராக மத்திய அமைச்சர் பிரதிமா பூமிக்?

திரிபுராவின் முதல் பெண்  முதல்வராக மத்திய அமைச்சர் பிரதிமா பூமிக்?
X

பிரதமர் மோடியுடன் பிரதிமா பூமிக் (கோப்புப்படம்)

"அடையாள நெருக்கடியால்" பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடையாளத்தை வழங்கினார் என்று பிரதிமா பூமிக் கூறினார்.

சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி கோட்டையான தன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், திரிபுராவின் முதல் பெண் முதலமைச்சராகவும், வடகிழக்கில் இருந்து முதல் பெண் முதலமைச்சராகவும் ஆவதற்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய இணை அமைச்சர் பிரதிமா பூமிக் வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார். தன்பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மார்ச் 1998 முதல் மார்ச் 2018 வரை வென்றிருந்தார்

பாரதிய ஜனதா கட்சி சுமார் 39 சதவீத வாக்குகளுடன் 32 இடங்களை வென்றது. திப்ராமோத்தா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 11 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றன. திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது கணக்கைத் தொடங்கியது

யார் இந்த பிரதிமா பூமிக்?

தன்பூர் தொகுதியில் 19,148 மொத்த வாக்குகளை 42.25 சதவீத வாக்குகளுடன் பிரதிமா பூமிக் வென்றார். அவர் 'திரிபுராவின் திதி' அல்லது 'பிரதிமா தி' என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவரது தந்தை பள்ளி ஆசிரியர். இவருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். அவரது முந்தைய நாட்களில், அவர் தொகுதி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடினார்.

அறிவியலில் பட்டதாரியான பௌமிக் 1991 முதல் பாஜகவில் இருந்து வருகிறார். கட்சியில் சேர்ந்த ஒரு வருடம் கழித்து, பௌமிக் பிஜேபி மாநிலக் குழுவில் உறுப்பினரானார், அடுத்த ஆண்டு கட்சியின் தன்பூர் மண்டல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பௌமிக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர், 2016ல் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2019 மக்களவைத் தேர்தலில், பௌமிக் 305,689 வாக்குகள் வித்தியாசத்தில் அப்போதைய சிட்டிங் எம்பியான சங்கர் பிரசாத் தத்தாவை தோற்கடித்தார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக 2019 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வயதான பௌமிக், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2021 இல் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்

பூமிக் 1998 மற்றும் 2018 இல் தன்பூரில் இருந்து திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் மாணிக் சர்க்காருக்கு எதிராக போட்டியிட்டார், ஆனால் இரண்டு முறையும் தோல்வியடைந்தார். இருப்பினும், இந்த முறை, அவர் அதே தொகுதியான தன்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கவுசிக் சந்தாவை 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த ஆண்டு திரிபுரா தேர்தலில் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் போட்டியிடவில்லை.

அடுத்த திரிபுரா முதல்வர் என்ற ஊகங்கள் குறித்து கேட்டதற்கு, பூமிக், “நான் கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறேன். கட்சிக்காகத்தான் நான் உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். கட்சியின் அறிவுறுத்தலின்படி நான் தேர்தலில் போட்டியிட்டேன், கட்சி எனது தாய். எனவே, எதையும் ஊகிக்கக் கூடாது. கட்சி என்ன சொன்னாலும் அதை செய்வேன் என்று கூறியுள்ளார்

திரிபுரா பாஜக தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி, பூமிக் அடுத்த திரிபுரா முதல்வராக வருவார் என்ற ஊகங்கள் குறித்து, “இந்த தேர்தலில் நாங்கள் ஒரு அணியாக பணியாற்றியுள்ளோம். சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பாஜகவில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை. ஓரிரு நாட்கள் காத்திருக்கவும், அதில் நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறினார்

Tags

Next Story