/* */

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!

குழந்தைகளை தாக்கும் புதிய வகையான தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!
X

கொரோனா பெருந்தொற்றின் தாக்கமே இன்னமும் முழுமையாக குறையவில்லை. இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவுமோ என்ற கவலை உள்ளது. இந்த சூழலில், தக்காளி காய்ச்சல் என்ற புதுவகை காய்ச்சல் அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது.

குழந்தைகளுக்கு பாதிப்பு

அண்டை மாநிலமான கேரளாவில்தான் இதன் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கேரளா மாநிலத்தில், 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பலருக்கு, திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை பரிசோதித்ததில், தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அறிகுறிகள் என்ன?

தக்காளி காய்ச்சல் என்பதால், தக்காளி மூலம் பரவுகிறதோ என்ற பயப்பட வேண்டாம். தக்காளிக்கும், இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இக்காய்ச்சலின் அறிகுறிகளாக, உடலில் அதிக காய்ச்சல் ஏற்படுவதுடன் மிக சோர்வாக இருக்கும். கை, கால்கள் வெளுத்து காணப்படுதல், உடலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உண்டாவது உள்ளிட்டவை, தக்காளி காய்ச்சலில் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காய்ச்சலானது, கொசுக்கள் மூலம் பரவும் சிக்கன்குன்யாவின் பின்விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் மருத்துவர்கள், இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்ற ஆறுதலான தகவலையும் கூறியுள்ளனர்.

தக்காளியால் ஆபத்தா?

அண்டை மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் பரவியுள்ள நிலையில், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. தக்காளி வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு யாரேனும் வருகின்றனரா என்று, தமிழக சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று கூறுகையில், தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். உடலில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி, தக்காளி போல சிவந்திருப்பதால் தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டது; தக்காளிக்கும் இந்த வைரஸுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இந்த புதுவகை காய்ச்சலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகவே உள்ளது என்று தெரிவித்தார்.

Updated On: 8 May 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்