/* */

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா

இந்தியாவில் மிகப் பெரிய சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா
X

ராஜேஷ் கோபிநாதன்.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் கோபிநாதன் கடந்த 2017ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-ஆக பதவியேற்றார். அதற்கு முன்னர் இதே நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். கிட்டத்தட்ட சிஇஓ-வாக பதவியேற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் தனது பதவியை ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்துள்ளார். வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்த பதவியில் இருப்பார் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகியதை அடுத்து கிருத்திவாசன் பொறுப்பு தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் நிதிச்சேவைகள், இன்ஷூரன்ஸ் மற்றும் வங்கிச் சேவைகள் பிரிவின் சர்வதேச தலைவராக உள்ளார். இவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் 1989ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 March 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!