Several babies named Chandrayaan நிலவில் சந்திரயான் இறங்கிய நாளில் பிறந்த குழந்தைகளுக்கு 'சந்திரயான்' பெயர்

Several babies named Chandrayaan நிலவில் சந்திரயான் இறங்கிய நாளில் பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர்
சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய நாளில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பிறந்த பல குழந்தைகளுக்கு சந்திரயான்' பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவின் நிலவுப் பயணம் பூமியின் இயற்கையான செயற்கைக்கோளின் மேற்பரப்பை அடைந்த சிறிது நேரத்திலேயே ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் பிறந்த பல குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என்று பெயரிடப்பட்டது.

கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையில் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர்களால் அவ்வாறு பெயரிடப்பட்டது.

"இது இரட்டை மகிழ்ச்சி. சந்திரனில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய சில நிமிடங்களில் எங்கள் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சந்திர பயணத்தின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளோம்" என்று அந்த நான்கு குழந்தைகளில் ஒருவரின் தந்தை கூறினார். .

குழந்தை பிறந்த 21 வது நாளில் குழந்தைக்கு பெயர் வைப்பது உள்ளூர் பாரம்பரியம். ஆண் குழந்தைக்கு சந்திரயான் பெயரை வைக்க பெரியவர்களிடம் கூறுவோம் என்றார்.

சந்திரயான் என்பது சந்திரனுக்கு வாகனம் என்று பொருள்படுவதால் குழந்தையின் பெயர் "சந்திரா" அல்லது "லூனா" என்றும் இருக்கலாம் என்று அவர் கூறினார்.

"சந்திராயன் என்பது ஸ்டைலான பெயர்தான். 21ம் தேதி பூஜையில் இறுதி முடிவு எடுப்போம். என் குழந்தையின் கழுத்தில் சந்திரனின் அடையாளமும் உள்ளது. குழந்தை 'சந்திரபகபனால்' ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு இது போதுமானது " என்று குழந்தையின் தாய் கூறினார்.

தலச்சுவா கிராமத்தைச் சேர்ந்த துர்கா மண்டல், நீலகண்டபூரைச் சேர்ந்த ஜோஷ்னியாராணி பால் மற்றும் அங்குலே கிராமத்தைச் சேர்ந்த பெபினா சேத்தி ஆகியோரும் புதன் மாலை குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். துர்காவின் குழந்தை பெண் குழந்தை, மற்ற இருவரும் ஆண் குழந்தைகள்.

இதுகுறித்து கேந்திரபாரா அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் கூறுகையில், “புதிய தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு சந்திரயான் பெயரை சூட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த காலங்களில் கடலோர மாவட்டத்தை தாக்கிய சூறாவளி பெயர்கள் பல குழந்தைகளுக்கு பெயரிடப்பட்டது என்று கூறினார்.

மருத்துவமனையின் கூடுதல் மாவட்ட மருத்துவ அலுவலர் கூறுகையில், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். சந்திரயான் சந்திரனில் இறங்கிய நேரத்தில் பூமிக்கு வந்ததால் குழந்தை அதிர்ஷ்டசாலி. குழந்தை பூமியிலும் சந்திரயான் நிலவிலும் ஒரே நேரத்தில் தரையிறங்கியது என்று அவர் கூறினார்.

Tags

Next Story