/* */

ஆங்கிலேயர்களுக்கு சாவர்க்கர் எழுதிய கடிதம் பற்றி ராகுல் காந்தி விமர்சனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ஆங்கிலேயர்களிடம் சாவர்க்கரின் கருணை மனுக்கள் குறித்து ராகுல் காந்தி பேசினார்.

HIGHLIGHTS

சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் கருணை மனுக்கள் தொடர்பாக இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரை விமர்சித்த ராகுல் காந்தியின் கருத்து குறித்து, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில் அவர் தலைமையிலான சிவசேனா பிரிவுக்கு . வி.டி சாவர்க்கர் மீது "மிகப்பெரிய மரியாதை" உள்ளது என்று கூறினார்

ராகுல் காந்தி கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. வீர் சாவர்க்கரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில், நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்கும்போது, பி.டி.பி.யுடன் (ஜம்மு-காஷ்மீரில்) ஆட்சியில் இருந்ததற்கான காரணத்தை பாஜகவும் சொல்ல வேண்டும்," என்று திரு தாக்கரே கூறினார். காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் கூட்டணி வைத்து இந்துத்துவா மரபு. பிடிபி ஒருபோதும் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்லாது ," என்று அவர் கூறினார்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை தக்கவைக்க காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் ராகுல் காந்தி மற்றும் ஷரத் பவாரின் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடியை உருவாக்குவதற்கு திதாக்கரே பாஜகவுடன் முறித்துக் கொண்டதில் இருந்து, இரு கட்சிகளும் இதற்கு முன்னரும் இதுபோன்ற சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளன.


மகாராஷ்டிராவின் அகோலாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி, வி.டி. சாவர்க்கரின் கருணைக் கடிதத்தின் நகலைக் காட்டிதனது கருத்துக்களை ஆதரித்தார். சாவர்க்கர் எழுதிய கடிதத்தில், "ஐயா, உங்களின் மிகவும் கீழ்ப்படிதலுள்ள ஊழியராக நான் இருக்க விரும்புகிறேன் என எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை எழுதி கையெழுத்திட்டதற்கு என்ன காரணம்?, பயம், ஆங்கிலேயர்களுக்குப் பயம். என்று கூறினார்

இது குறித்து கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்து, ராகுல் காந்தி கூறுகையில் "யாராவது தங்கள் சித்தாந்தத்தை முன்வைக்க விரும்பினால், அவர்கள் முன்வைக்க வேண்டும்" என்றார்.

ராகுல் மேலும் கூறுகையில், மகாத்மா காந்தி , ஜவஹர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தபோதும், அவர்கள் அத்தகைய கடிதத்தில் கையெழுத்திடவில்லை. இந்தக் கடிதத்தில் சாவர்க்கர் கையெழுத்திட்டதைப் பற்றிய எனது கருத்து இதுதான் என்று கூறினார். "இவை இரண்டு சித்தாந்தங்கள். எங்கள் கட்சி விவாதத்திற்கு திறந்திருக்கிறது. எங்களிடம் சர்வாதிகாரிகள் இல்லை. என்றும் கூறினார்

முன்னதாக, மறைந்த வி.டி. சாவர்க்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை பாஜகவின் மத்திய அரசு ஏன் வழங்கவில்லை என்று உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார். "எங்களிடம் யார் கேள்வி கேட்டாலும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன? சாவர்க்கரைப் பற்றி எங்களைக் கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை" என்று அவர் வாதிட்டார்.

வாஷிமில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் ராகுல் காந்தி கூறியது: "ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், பிர்சா முண்டா தலைவணங்க மறுத்தார்; அவர் மரணத்தை எதிர்கொண்டார். காங்கிரஸ் கட்சியான நாங்கள் அவரை எங்கள் முன்மாதிரியாக கருதுகிறோம். பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்- க்கு, ஆங்கிலேயர்களுக்கு கருணை மனுக்களை எழுதி, ஓய்வூதியத்தை ஏற்றுக்கொண்ட சாவர்க்கர் தான் முன்னுதாரணம் என்று கூறினார்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் குஜராத்தில் இன்று கூறுகையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது. இது ஒரு உண்மை: ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு, நாட்டை ஆங்கிலேயர்களுக்கு விற்றவர் சாவர்க்கர். இதையே நானும் சொல்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா பிரிவின் ஆதரவாளர்கள் ராகுல் காந்திக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியும், காங்கிரஸும் வரலாற்றை திரித்து பரப்புகிறார்கள், ஆனால் மகாராஷ்டிரா மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று பாஜகவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பால் தாக்கரேவின் பெயரைக் கூற அவருக்கு உரிமை இல்லை என்று உத்தவ் தாக்கரேவையும் அவர் தாக்கினார். பாலாசாகேப் தாக்கரே தனது வாழ்நாள் முழுவதும் சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தை முன்னெடுத்துச் சென்றார். வீர் சாவர்க்கரை இழிவுபடுத்தி மக்களைத் தாக்கினார். துரதிர்ஷ்டவசமாக, ராகுல் காந்தியின் யாத்திரையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர் என்று கூறினார்

உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரே இந்த வார தொடக்கத்தில் ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றார்.

Updated On: 17 Nov 2022 10:06 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி