/* */

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா

லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறினர்

HIGHLIGHTS

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா
X

லக்கிம்பூர் வன்முறையில்  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் ராகுல், பிரியங்கா

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கலந்து கொள்வதை அறிந்த விவசாயிகள் கறுப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக திரண்டனர். ஆனால் அவர்கள் மீது காரி மோதியதால், அங்கு வன்முறை வெடித்து, 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலையும் அனுமதிக்காமல் உபி அரசு தடைவிதித்தது. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தி தடுப்புக்காவலில் வைத்திருந்த நிலையில், நேற்று காலையில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இவர்களுடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, மாநிலங்களவை உறுப்பினர் தீபெந்தெர் சிங் ஹூடா ஆகிய 5 பேருக்கு மட்டும் லக்கிம்பூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இவர்கள் சென்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தம் ஏழு வாகனங்கள் மட்டுமே இவர்களைப் பின்தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் கொல்லப்பட்ட உள்ளூர் செய்தியாளர் ராமன் கஷ்யாப் வீட்டிற்கும் சென்றனர்.

இதனை தொடர்ந்து ராகுல் காந்திதனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, தியாகி லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தை பகிர்ந்துகொண்டேன். ஆனால் நீதி கிடைக்கும் வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும். உங்கள் தியாகத்தை மறக்க மாட்டேன் லவ் ப்ரீத் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், பத்திரிக்கையாளர் தியாகி ராமன் காஷ்யப்பின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்தேன். மனிதாபிமானமற்ற செயலால் தங்கள் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்ன வேண்டும்? நீதி. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Updated On: 7 Oct 2021 12:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்