/* */

அமெரிக்க ஆப்பிள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு: பிரியங்கா சாடல்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கான சுங்க வரியை குறைக்கும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா கடுமையாக சாடினார்

HIGHLIGHTS

அமெரிக்க ஆப்பிள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு:  பிரியங்கா சாடல்
X

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா

இமாச்சல பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிரியங்கா காந்தி, மிகப்பெரிய இழப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. கொள்முதல் தொடர்பான தொழிலதிபர்களின் முடிவுகளால் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், அமெரிக்காவில் இருந்து வரும் ஆப்பிள்கள் மீதான வரி குறைப்பு குறித்த மத்திய அரசின் நடவடிக்கை அவர்களை மோசமாக பாதிக்கும் என்றும் கூறினார்.

இது குறித்து பிரியங்கா கூறியதாவது: இது அமெரிக்க ஆப்பிள் இறக்குமதியை எளிதாக்கும், மேலும் அவை எளிதாக விற்கப்படும். சிம்லாவில் ஆப்பிள் கொள்முதல் விலையை பெரிய தொழிலதிபர்கள் குறைத்துள்ளனர். இங்கு ஆப்பிள் விவசாயிகள் கஷ்டப்படும்போது, யாருக்கு உதவ வேண்டும்? இவர்களுக்கா அல்லது அமெரிக்காவில் உள்ள விவசாயிகளுக்கா? ஆப்பிள் விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்கொண்ட நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் மற்றும் அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்றார்.

ஜூன் மாதம், உலக வர்த்தக அமைப்பில் நிலுவையில் உள்ள ஆறு சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் இந்தியாவும் ஒப்புக்கொண்டன. மேலும், கொண்டைக்கடலை, பருப்பு, பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆப்பிள்கள், போரிக் அமிலம் மற்றும் நோயறிதல் எதிர்வினைகள் உள்ளிட்ட சில அமெரிக்கப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்தார்.

சில எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக 2019ம் ஆண்டில் அமெரிக்க ஆப்பிள்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அமெரிக்கா உட்பட அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களுக்கும் 50 சதவிகிதம் இன்னும் பொருந்தும், ஆப்பிள் மீதான மோஸ்ட் ஃபேவர்டு நேஷன் (எம்எஃப்என்) வரியில் எந்தக் குறைப்பும் இல்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் மீதான வரியை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசிய பிரியங்கா காந்தி, மலைப்பாங்கான மாநிலத்தின் நிலைமையை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில், மாநில அரசு தன்னால் இயன்றதைச் செய்கிறது என்றும், பேரிடரை அரசியலாக்கக் கூடாது. நிலைமை மிகவும் வேதனையானது. மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது... மக்கள் அவதிப்படுகின்றனர். மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்தால் அது உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். மாநில அரசு தன்னால் இயன்றதை எல்லாம் செய்து வருகிறது. ஆனால் சில விஷயங்களை மத்திய அரசின் உதவியோடுதான் செய்யமுடியும். நிச்சயமாக அவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட பேரிடரை யாரும் அரசியலாக்க நினைக்கவில்லை என்று கூறினார்

Updated On: 13 Sep 2023 8:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?