Begin typing your search above and press return to search.
அடோப் தலைமை செயல் அதிகாரியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
HIGHLIGHTS
அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். இந்தியாவுடனான அடோப் நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.