Begin typing your search above and press return to search.
சந்தன் மித்ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான சந்தன் மித்ராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான சந்தன் மித்ராவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் அவர் என்றும் நம் நினைவில் இருப்பார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
"திரு. சந்தன் மித்ரா அவர்கள் தனது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் என்றும் நம் நினைவில் வாழ்வார். அவர் அரசியல் மற்றும் ஊடக உலகில் புகழ் பெற்று விளங்கியவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம்சாந்தி", என்று பிரதமர் கூறியுள்ளார்.