வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் வாழ்த்து

வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் வாழ்த்து
X

வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல், தங்கம் வென்ற சைலேஷ் குமார் மற்றும் படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவ் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள்! ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவரது அசைக்க முடியாத திறமை மற்றும் உறுதிக்கு ஒரு சான்றாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”


"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சைலேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் அவரது செயல்திறன் அசாதாரணமானது. அவரது உறுதியும், கடின உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.”

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் முதல் பதக்கம் வென்றதன் மூலம் பிராச்சி யாதவ் இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். மகளிர் வி.எல் 2 பாரா படகுப் போட்டியில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிராச்சி யாதவுக்கு வாழ்த்துக்கள். அவரது அசாத்தியமான செயல்திறன் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது.”

இவ்வாறு பிரதமர் மோடிதனது வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story