/* */

டிரோன் பார்சல் சர்வீஸ் : அசத்தும் இந்திய அஞ்சல்துறை

இந்திய அஞ்சல் துறையானது, ஆளில்லா டிரோன்கள் மூலம் பார்சலை உரியவருக்கு வினியோகம் செய்து அசத்தியுள்ளது.

HIGHLIGHTS

drones for parcel delivery
X

பார்சலுடன் வந்த டிரோன் 

இந்திய அஞ்சல் துறை, நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், அஞ்சல் துறையின் தேவைகள் வெகுவாக குறையத் தொடங்கின. குறிப்பாக கடிதம், தந்தி சேவை வெகுவாக குறைந்துவிட்டது.

எனினும், தனது சேவைகளை புதுப்பித்து கொள்வதிலும், காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவும் இந்திய அஞ்சல்த்துறை ஒருபோதும் தவறியதில்லை. அவ்வகையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், டிரோன்கள் வாயிலாக பார்சல்களை அனுப்பும் திட்டத்தை, பரிச்சார்த்த முறையில் இந்திய அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி குஜராத் மாநிலத்தின் புஜ் வட்டம், ஹபே கிராமத்தில் இருந்து, கட்ச் மாவட்டம் நேர் எனும் கிராமத்திற்கு, டிரோன் மூலம் பார்சல் அனுப்பப்பட்டது. இரு கிராமங்களுக்கும் இடையே உள்ள தொலைவு, சுமார் 46 கிலோ மீட்டர் என்ற நிலையில், வெறும் 25 நிமிடங்களில் கடந்து, பார்சலை ட்ரோன் வினியோகம் செய்ததாக, அஞ்சல்துறையினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Updated On: 8 Jun 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?