பிரதமர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை: சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை: சுப்பிரமணியன் சுவாமி
பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று நண்பகல் 12.29.08-க்கு நடைபெற்றது. அயோத்தியில் பால ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அகற்றப்பட்டது.

ராமர் சிலை பிராண பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார்.

இந்த நிகழ்வின் போது அயோத்தி கோயில் மற்றும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமரிசித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அயோத்தி பிராண பிரதிஷ்டை விழாவுக்கு சற்று முன்பு பிரதமர் மோடியை பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக தாக்கினார். சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள குறிப்பில், மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றுவதில்லை, குறிப்பாக தனது மனைவியிடம் நடந்துகொள்வதிலும், ராமராஜ்ஜியத்தின் பிரதமராக செயல்படவில்லை என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பதவிக்கு பூஜை இல்லாத நிலையில், பிராண பிரதிஷ்டை பூஜைக்கு மோடி தயாராகிவிட்டார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பாக தனது மனைவியிடம் தனது நடத்தையில் ராமரைப் பின்பற்றவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமராக, ராம ராஜ்ஜியத்தின்படி நான் பணியாற்றவில்லை'- இது சுவாமியின் குறிப்பு.

கடந்த மாதமும் மோடிக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்தார். 'மனைவியை கைவிட்டவர் மோடி' என்பது அவரது கூர்மையான கிண்டல். அயோத்தியில் பிராண பிரதிஷ்டா பூஜை செய்ய மோடியை ராம பக்தர்கள் எப்படி அனுமதிக்க முடியும்? ராமர் தனது மனைவி சீதையைக் காப்பாற்ற ஒன்றரை ஆண்டுகள் போராடினார். ஆனால், மறுபுறம், மோடி தனது மனைவியைக் கைவிட்டதற்காக அறியப்பட்டவர். அவர் இன்னும் பூஜை செய்வாரா?' என்று சுவாமி கேள்வி எழுப்பினார் .

Tags

Next Story