/* */

ஜெர்மனி,டென்மார்க்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர்மோடி சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வருகிற மே மாதம் முதல் வாரத்தில் 3 நாடுகளுக்கு செல்கிறார்-

HIGHLIGHTS

ஜெர்மனி,டென்மார்க்,பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர்மோடி சுற்றுப்பயணம்
X

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக வருகிற மே மாதம் முதல் வாரத்தில் 3 நாடுகளுக்கு செல்கிறார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் இரண்டாவது இந்தியா -நார்டிக் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நார்டிக் அமைப்பின் உறுப்பு நாடுகளான நார்வே, ஐஸ்லாண்ட், டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, ஆகிய 5 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி, பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அவர்களை நேரில் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தோ ஜெர்மன் ஐ.ஜி.சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இருப்பினும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 27 April 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது