/* */

கண்ணிவெடி தாக்குதல் மூலம் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி

இந்தியாவில் மிகப்பெரிய கண்ணிவெடி தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளதாக தகவல்

HIGHLIGHTS

கண்ணிவெடி தாக்குதல் மூலம் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி
X

மாதிரி படம்

நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பு இந்தியாவில் மிகப்பெரிய கண்ணிவெடி தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் பயிற்சி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு அதிநவீன கண்ணி வெடிகளை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அனுப்பி இருப்பதை உளவுத்துறை கண்டுப்பிடித்து உள்ளது. அந்த கண்ணிவெடிகள் ஒவ்வொன்றும் சுமார் 3 கிலோ எடை கொண்டவை.

இந்த கண்ணி வெடி தாக்குதலை குறிப்பிட்ட இடங்களில் நடத்துவதற்கு 6 நக்சலைட் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. முகமது சித்திக் என்ற பயங்கரவாதி தலைமையில் அந்த பயங்கரவாதிகள் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள். அதுபோல ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்து உள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் நாச வேலைக்கு முயற்சிகள் நடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய நகரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உளவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On: 14 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  4. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  5. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  6. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  7. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  8. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  9. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  10. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...