பிரதமர் மோடியை பாராட்டிய அமைதிக்கான நோபல் குழு தலைவர்

பிரதமர் மோடியை பாராட்டிய  அமைதிக்கான நோபல் குழு தலைவர்
X

நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினர் அஸ்லே டோஜே

போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி மிகவும் நம்பகமான தலைவர். அவரால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினர் அஸ்லே டோஜே கூறியுள்ளார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கை அறிஞரும் அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினருமான அஸ்லே டோஜே . செய்தியாளர்களிடம் பேசிய போது அவர், இந்தியா வல்லரசாக இருக்க தகுதியான நாடு என்றும், போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி மிகவும் நம்பகமான தலைவர் என்றும், அவரால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் கூறினார்.

உக்ரைனில் நடந்து வரும் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை "நினைவூட்டுவதற்கான" இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டிய நார்வே நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, சர்வதேச அரசியலில் உலகிற்கு இதுபோன்ற தலையீடுகள் தேவை என்று வியாழனன்று கூறினார்.

"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை ரஷ்யாவிற்கு நினைவூட்ட இந்தியாவின் தலையீடு மிகவும் உதவியாக இருந்தது" என்று டோஜே கூறினார்.

"இந்தியா உரத்த குரலில் பேசவில்லை, யாரையும் அச்சுறுத்தவில்லை, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை நட்பாக வெளிப்படுத்தினர். சர்வதேச அரசியலில் எங்களுக்கு இது அதிகம் தேவை,” என்று அவர் மேலும் கூறினார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறிய ஒரு நாள் கழித்து டோஜேவின் கருத்து வந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியைப் பாராட்டிய அவர், பிரதமர் மோடியின் கொள்கையால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக மாறி வருகிறது என்று கூறினார்

Tags

Next Story
why is ai important to the future