/* */

பணம் என்ன மரத்துலயா காய்க்குது?: கர்நாடக தேர்தலில் நிஜமானது

மைசூரில் காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரரின் வீட்டில் மாமரத்தில் இருந்து ரூ.1 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பணம் என்ன மரத்துலயா காய்க்குது?: கர்நாடக தேர்தலில் நிஜமானது
X

தேர்தல் நடக்கவிருக்கும் கர்நாடகாவில் ​​மரங்களில் வளர்ந்து ஆட்டோரிக்சாவில் பயணம் செய்த ஒரு கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். ராய் புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராயின் சகோதரர் ஆவார்.

மாமரத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொகையை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றினர். தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக ஐடி துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

1 கோடி கணக்கில் வராத பணத்துடன் 2 பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர். ஏப்ரல் 13ஆம் தேதி சிட்டி மார்க்கெட் பகுதிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் இருந்து மீட்கப்பட்டது .

கர்நாடகாவில் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் பெரிய தொகையை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

கடந்த மாதம், தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர் அங்கிதா பில்டர்ஸ் அலுவலகம் மற்றும் ஹுப்பள்ளியில் உள்ள அதன் உரிமையாளர் நாராயண் ஆச்சார்யாவின் வீடுகளில் ஐடி குழுக்கள் சோதனை நடத்தினர்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் கங்காதர் கவுடாவின் இரண்டு குடியிருப்பு வளாகங்களிலும், தட்சிண கன்னடாவின் பெல்தங்கடியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் கங்காதர் கவுடாவின் மகன் ரஞ்சன் கவுடாவுக்கு சொந்தமானது.

2018ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த கவுடா, கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் மே 13-ம் தேதி வெளியாகும்.

Updated On: 3 May 2023 6:11 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!