/* */

பொதுத்துறை வங்கிகளுக்கான தேர்வு: 13 பிராந்திய மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை

இந்தி, ஆங்கிலத்துடன் 13 பிராந்திய மொழிகளில் பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை

HIGHLIGHTS

பன்னிரண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இனிமேல் விளம்பரப்படுத்தப்படும் காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியாளர்களுக்கான தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து ஆராய இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை ஐபிபிஎஸ்-ஆல் தொடங்கப்பட்ட தேர்வு செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

உள்ளூர் இளைஞர்களுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பை வழங்குவதோடு உள்ளூர்/பிராந்திய மொழிகள் மூலம் வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த குழு செயல்பட்டது.

பிராந்திய மொழிகளில் எழுத்தர் தேர்வுகளை நடத்தும் இந்த முடிவு எதிர்கால பாரத ஸ்டேட் வங்கி காலியிடங்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்ட மற்றும் ஆரம்பத் தேர்வுகள் நடைபெற்ற காலியிடங்களுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய ஆட்சேர்ப்பு செயல்முறை விளம்பரத்தின் படி நடத்தி முடிக்கப்படும்.

Updated On: 1 Oct 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...