அதிகரிக்கும் கொரோனா: பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என உத்தரவு

Covid Cases in Bangalore Today - இந்தியாவில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, கொரோனா கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளையும் அறிவித்தது.
இதனிடையே, இந்தியாவில் ஜூலையில் கொரோனா 4வது அலை உருவாகலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். அதை உறுதிப்படுத்துவது போல், இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில், பெருந்தொற்றின் தாக்கம் வேகமாக பரவுவதால், கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் ஹரீஷ் குமார் கூறுகையில், தலைநகர் பெங்களூருவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மால்கள், வணிக வளாகங்கள் உள்பட பொது இடங்களில், பொதுமக்கள் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu