வயநாட்டில் நிலச்சரிவு: நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

வயநாட்டில் நிலச்சரிவு: நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
X
கேரள மாநிலம் வயநாட்டில் இன்றுஅதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். என்.டி.ஆர்.எஃப் மற்றும் உள்ளூர் படைகளின் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மேப்பாடி அருகே நடந்தது.

விவரங்களின்படி, அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், அதிகாலை 4.10 மணியளவில், மாவட்டத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டன, மேலும் NDRF குழு வயநாடு சென்று கொண்டிருக்கிறது . மேப்பாடியில் உள்ள மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (KSDMA) முகநூல் பதிவின்படி, கண்ணூர் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவ வயநாட்டிற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சாத்தியமான அனைத்து மீட்புப் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிந்ததும், அரசு அமைப்புகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள் வயநாட்டிற்குச் சென்று நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்” என்று முதல்வர் கூறினார்.

இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. அவசர உதவிக்காக 9656938689 மற்றும் 8086010833 என்ற ஹெல்ப்லைன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?