/* */

சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் தடை: காரணம் இதுதான்

வரும் 19-ம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை நீடிப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு  மீண்டும் தடை: காரணம் இதுதான்
X

கோப்பு படம்

கேரள மாநிலம், பதினம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில், ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு, கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி, நடையை திறந்து வைத்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள், 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே, கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கோட்டயம் மாவட்டம் கோட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூன்று வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் 19-ம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, கேரள அரசு அறிவித்துள்ளது. தற்போது சபரிமலையில், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Oct 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!