/* */

கனமழையால் மூழ்கியது கேரளா: மீட்புப்பணிக்கு புறப்படும் கடற்படை

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க டைவிங் மற்றும் மீட்பு குழுக்களுடன் தெற்கு கடற்படை ஹெலிகாட்டருடன் தயாராகி வருகிறது.

HIGHLIGHTS

கனமழையால் மூழ்கியது கேரளா: மீட்புப்பணிக்கு புறப்படும் கடற்படை
X

ஹெலிகாப்டர்களை தயார்படுத்தும் தெற்கு கடற்படையினர். 

கேரளாவின் 5 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு கேரளாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரை காணவில்லை. மாநில பேரிடர் மீட்புப்பைடயினர் அங்கு விரைந்துள்ளனர்.இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மாநில அரசுக்கு உதவ தலைமையக தெற்கு கடற்படை தயார் நிலையில் உள்ளது.

கொச்சி, கோட்டயம், கூட்டிக்கல் பகுதிகளில் கடலில் மூழ்கிய குடும்பங்களை விமானம் மூலம் மீட்க கொச்சியின் தெற்கு கடற்படையிடம் கேரள மாநில பேரிடர் மீட்பு ஆணையம் உதவி கோரியுள்ளது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது. டைவிங் மற்றும் மீட்பு குழுக்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

வானிலை விமானச் செயல்பாடுகளுக்கு உகந்ததாக அமைந்தவுடன், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மக்களை மீட்க தயாராகி வருகின்றன.

Updated On: 16 Oct 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்