ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது
X
By - S.Elangovan,Sub-Editor |29 April 2022 6:00 AM IST
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு, டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை வகிக்கிறார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாட்டில், நீதித்துறை சீர்திருத்தங்கள், நீதிபதிகள் நியமனம், நாட்டின் முக்கிய நீதிமன்றங்களை முன்னுரிமை அடிப்படையில் இணையம் வழியாக இணைப்பது, நீதிமன்றங்களுக்கு தேவையான மனித வளம், பணியாளர் கொள்கை உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu