ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி

பைல் படம்.
இந்தியாவின் மதிப்புமிக்க அரசுப் பணிகளில் ஒன்றான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) போன்ற பதவிகளை உள்ளடக்கியது யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. கடும் போட்டி நிறைந்த இந்தத் தேர்வுக்குத் தயாராவதற்கு பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், அவற்றின் கட்டணம் பலருக்கு ஒரு தடையாக உள்ளது.
இந்நிலையில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் வழங்கும் இலவச யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி குறிப்பிடத்தக்கதாகும். இப்பல்கலைக்கழகத்தின் குடியிருப்பு பயிற்சி அகாடமி (RCA) இப்பயிற்சியை, சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் ஆர்வமுள்ள பட்டதாரிகள் RCA-JMI நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் 18, 2024 முதல் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 19, 2024 ஆகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், மே 21-22, 2024இல் திருத்தும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு
ஜூன் 1, 2024 அன்று டெல்லி, ஸ்ரீநகர், ஜம்மு, ஹைதராபாத், குவாஹாத்தி, மும்பை, பாட்னா, லக்னோ, பெங்களூரு மற்றும் மலப்புரம் ஆகிய 10 தேர்வு மையங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வில் பொது அறிவு மற்றும் கட்டுரை எழுதும் திறன் ஆகிய பகுதிகள் இடம்பெறும். பொது அறிவுக்கான வினாத்தாள் யுபிஎஸ்சி தேர்வு முறையை ஒட்டியதாக, ஆங்கிலம்/ஹிந்தி/உருது மொழிகளில் வினாக்களுடன் அமைந்திருக்கும். கட்டுரைத் தேர்விலும் இந்த மூன்று மொழி விருப்பத்தேர்வுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ₹950/-. கூடுதல் கட்டணங்கள் பொருந்தலாம். விண்ணப்பிக்க jmicoe.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும்.
தேர்வு செய்யப்படும் முறை
பொது அறிவுத் தாளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், முதன்மை 900 விண்ணப்பதாரர்களின் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்படும். பின்னர், நேர்காணல் சுற்று நடைபெறும். தேர்வின் இறுதி முடிவில் மதிப்பெண்களில் சமநிலை ஏற்பட்டால், நேர்காணலில் அதிக மதிப்பெண்கள் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதிப்பெண்கள் சமமாக இருந்தாலும், வயதில் குறைந்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதி விதிமுறைகள்
2025ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
கவனிக்க: தமிழகத்தில் இருந்து இந்நுழைவுத் தேர்வில் கணிசமானோர் தேர்ச்சி பெறும் வகையில் பாடத்திட்டத்தை அமைத்து, தமிழ்நாடு அரசும் இதுபோன்ற இலவசப் பயிற்சி மையங்களைத் தொடங்கினால் பல மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu