/* */

ரயில்களில் காகிதம் இல்லா டிக்கெட் பரிசோதனை முறை அறிமுகம்

Local Train Ticket News - தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் சுமார் 185 ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு டேப்ளட் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ரயில்களில் காகிதம் இல்லா டிக்கெட் பரிசோதனை முறை அறிமுகம்
X

பைல் படம்.

Local Train Ticket News - ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம், டிக்கெட் பரிசோதகர்கள் தங்களிடம் உள்ள காகிதத்தில் அச்சிடப்பட்ட பட்டியலை சரிபார்த்து பயணிகளின் டிக்கெட்டுகளை சோதனை செய்யும் நடைமுறை இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி டிக்கெட் பரிசோதனை முறை தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே இயக்கும் ரயில்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க டேப்ளட் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி இனி டிக்கெட் பரிசோதனையை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தெற்கு ரயில்வே 857 கையடக்க டேப்களை ஒதுக்கீடு செய்துள்ளது. தெற்கு ரயில்வே இயக்கி வரும் சுமார் 185 ரயில்களில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் பல ரயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.

இதன் மூலம் காலியாக உள்ள இருக்கைகள் உடனடியாக டிக்கெட் முன்பதிவு இணையதளத்திற்கு அனுப்பப்பட்டு, வழியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் அவற்றை முன்பதிவு செய்து கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Aug 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது