/* */

ஆப்கனை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை

தலிபான்கள் தாக்குதல் காரணமாக, ஆப்கனில் இருந்து வெளியேற வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

HIGHLIGHTS

ஆப்கனை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
X

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை அங்கு 2 மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மஜார் ஐ ஷரீப் நகரில் இருந்து இந்தியாவிற்கு சிறப்பு விமானம் ஒன்று இன்று மாலை இயக்கப்பட உள்ளது. நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்த விமானத்தில் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாயகம் திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக தங்களது பெயர் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை உடனடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் நடத்த துவங்கியதை தொடர்ந்து, அங்குள்ள தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள், சிறப்பு விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்பட்டனர். தற்போது, ஆப்கனில், 1,500 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Updated On: 10 Aug 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!