உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலையில் படிப்பை தொடரலாம்

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலையில் படிப்பை தொடரலாம்
X

காட்சி படம் 

Ukraine Indian Students News - உக்ரைனை விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்

Ukraine Indian Students News - இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனில் ரஷ்யா படையெடுத்ததை அடுத்து அங்கிருந்து வெளியேறிய 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கதி என்ன என்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரஷ்ய தூதரகத்தின் துணைத் தூதரக அதிகாரி ரோமன் பாபுஷ்கின் கூறுகையில்,

ரஷ்யா - உக்ரைன் மோதலில் இருந்து வெளியேறியதால் படிப்பை பாதியிலேயே விட்டுச் சென்ற இந்திய மாணவர்கள், முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்கள் முந்தைய ஆண்டு படிப்பை இழக்காமல் விட்டுவிட்ட இடத்திலிருந்து அந்தந்த படிப்புகளைத் தொடரலாம் என்று கூறினார்.

ரஷ்ய கூட்டமைப்பின் கெளரவ தூதரும், திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய மாளிகையின் இயக்குநருமான ரதீஷ் சி நாயர் கூறுகையில், மாணவர்கள் உதவித்தொகை பெற்ற சந்தர்ப்பங்களில், ரஷ்ய பல்கலைக்கழகங்களிலும் இது ஏற்றுக்கொள்ளப்படலாம். இருப்பினும், உக்ரைனில் செலுத்தப்படும் கட்டணம் ரஷ்யாவில் போதுமானதாக இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story