/* */

எல்லைத் தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது: இந்திய கடலோர காவல் படை அதிரடி

இலங்கைப் படகில் வந்த 6 பேரையும் கைது செய்து, நாகப்பட்டினம் மெரைன் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

எல்லைத் தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது: இந்திய கடலோர காவல் படை அதிரடி
X

இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த கப்பல் 'அமேயா' நாகப்பட்டினம் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இலங்கையை சேர்ந்த படகு எல்லைத் தாண்டி இந்திய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது இந்திய கடல்சார் பகுதிகள் (வெளிநாட்டவர்கள் மீன்பிடித்தலை ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1981 படி குற்றமாகும். எனவே, இலங்கைப் படகில் வந்த 6 பேரையும் கைது செய்து, நாகப்பட்டினம் மெரைன் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை மற்றத் துறையினருடன் இணைந்து இலங்கை சர்வதேச கடல் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என மக்கள் தொடர்பு அலுவலர், (பாதுகாப்பு அமைச்சகம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 May 2022 4:52 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!