/* */

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருப்பதை உறுதி செய்ய இந்தியர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

HIGHLIGHTS

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
X

சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், வேற்றுமையில் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், காலனித்துவத்தின் எந்தத் தடயங்களையும் அகற்றி, நமது வேர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருப்பதை உறுதி செய்ய இந்தியர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்திய குடிமக்களின் ஆர்வத்தை எதுவும் தடுக்க முடியாது. இந்த மண்ணுக்கு சக்தி உள்ளது. பல சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா நிற்கவில்லை, பணியவில்லை, முன்னேறிக்கொண்டே இருக்கிறது

இந்தியாவில் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். பெண்களை அவமரியாதை செய்யும் எந்தவொரு மனப்பான்மை அல்லது செயலில் இருந்து விடுபட இந்தியர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும், வரவிருக்கும் 25 ஆண்டுகளில், நாட்டின் பெண்களின் பெரும் பங்களிப்பை நான் காண்கிறேன். பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்என்று தெரிவித்தார்.

தன்னிறைவு இந்தியா அல்லது ' ஆத்மநிர்பார் பாரத் ' என்பது ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு அரசு மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு அலகுக்கும் பொறுப்பாகும். சுயசார்பு இந்தியா -- இது அரசாங்க நிகழ்ச்சி நிரலோ அல்லது அரசாங்கத் திட்டமோ அல்ல. இது ஒரு வெகுஜன இயக்கம். சமுதாயத்தை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்..

Updated On: 16 Aug 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்