இந்தியாவில் புதிதாக 92 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 92 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா
X

கொரோனா பரிசோதனை (பைல் படம்)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பலன் இன்றி 2 ,219 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு தொடர்ந்து 2 வது நாளாக தொற்று தொற்று பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?