/* */

இந்தியாவில் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது, 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது, 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

இந்தியாவில் நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணிவரை தொற்று பாதித்தவர்களின் நிலைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 9 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 2,427 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக அதிகரித்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 14 லட்சத்து ஆயிரத்தி 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On: 8 Jun 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்